Tiruchirappalli

News April 12, 2025

திருச்சியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் வகையில், திருச்சி கிழக்கு வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19-ம் தேதி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

திருச்சி: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அழைப்பு

image

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 2024-25 ஆம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> ஏப்-16 முதல் மே-6 வரை விண்ணப்பிக்கலாம் என திருச்சி மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்ங்க..

News April 12, 2025

இறுதி ஊர்வலத்தில் வெடி விபத்து-ஒருவர் பலி

image

துறையூர் அருகே நடந்த ஒரு இறுதி ஊர்வலத்தின்போது வெடி வெடித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 12, 2025

திருச்சி மாவட்ட சிஇஒ அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட‌ முதன்மை கல்வி அலுவலர் அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் வரும் (25-04-25) அன்று சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று இடைநிலைக்கல்வி (SSLC) பொது தேர்வான சமூக அறிவியல் (15.04.2025) தேர்வுத்துறை அட்டவணைப்படி நடைபெறும் என மாணவர்களுக்கு தெரிவிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News April 11, 2025

திருச்சி: துணைப் பொதுச் செயலாளரானார் திருச்சி சிவா

image

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வனத்துறை அமைச்சர் க.பொன்முடி நீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கபட்டிருந்தார். இந்நிலையில் புதிய துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா-வை நியமித்து திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்த உங்களது கருத்துகளை COMMENT பண்ணுங்க..

News April 11, 2025

108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 11, 2025

திருச்சி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 10, 2025

திருச்சி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள் …

image

திருச்சி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, விபத்து அவசர வாகன உதவி – 102, பேரிடர் கால உதவி – 1077, விபத்து உதவி எண் – 108. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!

News April 10, 2025

திருச்சி வழியாக விடுமுறை கால ரயில் சேவை அறிவிப்பு

image

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை தாம்பரம் – போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் திருச்சி வழியாக ஏப்ரல்-11, 18, 25 மற்றும் மே-2 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூர் சென்றடையும். இந்தக் கோடை விடுமுறை சிறப்பு ரயிலை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திருச்சி தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!