India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்யராஜ் என்பவர் ஏற்கனவே 2 திருமணங்கள் செய்திருந்த நிலையில், 3வது முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜாதி பற்றுதலுடன் செயல்பட்டதாக துவரங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரத்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருச்சி எஸ்.பி. இன்று உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்.28-ஆம் தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பெண்கள் தங்கும் விடுதிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உரிமம் பெறாத விடுதிகள் tnswp.com என்ற இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் 5.10. 2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறினால் விடுதியின் மீது அபராதம் மற்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர், நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் அவரது மனைவி ராகினி ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 நபர்களால் வெட்டப்பட்டார். இதில் ஆட்டுக்குட்டி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகி திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும், கட்ட பஞ்சாயத்து மூலம் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் பட்டறை சுரேஷை நேற்று இரவு குடும்பத்துடன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் வாழ்க்கை வரலாறு நூல் மறு வெளியீட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் நூலை வெளியிட்டதை தொடர்ந்து மறு வெளியீடாக இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி நூலை வெளியிட, எம்.பி ஆ.ராசா, அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி பகுதிகளில் உள்ள விடுதிகளில் இன்று காலை போலீசார் திடீர் விசிட் அடித்தனர். அந்த விடுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் இருப்பதாக பெறப்பட்ட தகவலை எடுத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படை இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி பன்னாட்டு நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 145 பயணிகளுடன் சனிக்கிழமை மத்திய 2.40 மணிக்கு சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பின்னர் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் விமானநிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு இரவு 11.45 மணிக்கு மாற்று விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
துவரங்குறிச்சியை சேர்ந்த முகமது காசிம். இவரிடம் இதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர் ரூ.7,00,000 பணத்தை கடந்த 6 மாதத்திற்கு முன்பு வாங்கி விட்டு பணம் திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது காசிம் இன்று கவியரசன் மற்றும் குடும்பத்தினர் 3 பேரை கடத்தி முகமது காசிம் சொந்தமான லாட்ஜில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு நாளை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலில் பிறந்த 5 குழந்தைகளுக்கு,கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கணையாழி அணிவித்து, அதன் பின் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அன்பளிப்புகள் வழங்குகிறார், தொடர்ந்து இராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கணையாழி அணித்தும், மற்ற குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குகிறார்
Sorry, no posts matched your criteria.