India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் டிக்கெட் இன்றி பயணம் செய்தது, முன் பதிவு இல்லா டிக்கெட் வைத்துக் கொண்டு உயர்தர வகுப்புகளில் பயணம் செய்தது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக லக்கேஜ் எடுத்து செல்வது உள்ளிட்ட வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17,065 பயணிகளிடம் இருந்து ரூ.86,30,076 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <
திருச்சி மாவட்டத்தில், தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியை சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பொது நர்சிங் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் இயங்கி வரும் உரிமம் பெற்ற மது விற்பனை கூடங்களில் உறுப்பினா் அல்லாத நபா்களுக்கு மது விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்த வேண்டுமென, திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திருச்சி கலால் துறையின் உதவி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’81’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <
திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் நாளை (ஆக.,9) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியா் சரவணன் தெரிவித்துள்ளாா். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<17337815>>முகாம் நடைபெறும் பகுதிகள்<<>>)
▶️ திருச்சி கிழக்கு (வட்டம்)- செம்பட்டு-4
▶️ திருச்சி மேற்கு – பொன்நகா்-1
▶️ திருவெறும்பூா் – ஓஎப்டி
▶️ ஸ்ரீரங்கம் -காவல்காரன்பாளையம்
▶️ மணப்பாறை -ஆனாம்பட்டி
▶️ முசிறி -சோளம்பட்டி
▶️ துறையூா் – செல்லிப்பாளையம்
▶️ தொட்டியம் – கொசவம்பட்டி
▶️ மருங்காபுரி -ஊத்துக்குளி
▶️ லால்குடி -பெருவளநல்லூா்
▶️ மண்ணச்சநல்லூா் – பிச்சாண்டவா்கோவில்.
▶️ இத்தகவலை SHARE பண்ணுங்க.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் என்ற www.tamilvalarchithurai.com என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 26 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:05 மணிக்கு புறப்படும் திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் 11, 12, 13, 14 ஆகிய 4 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.