Tiruchirappalli

News April 14, 2025

திருச்சி: நாளை வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்படும் 

image

திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க நாளை (15.04.25) சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

News April 14, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

image

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா  நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிராபார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் ஏப்.14,15 ஆகிய 2 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து அனைவருக்கும் இலவச தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News April 14, 2025

திருச்சி: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 14, 2025

திருச்சி மாவட்டத்தில் 68.3 மி.மீ மழை பதிவு

image

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, புலிவலம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 68.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

திருச்சியில் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பிளஸ் 2 படித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 14, 2025

திருச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!.. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News April 13, 2025

மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஸ்பெஷல் ஆப்பரேஷன்

image

தமிழக காவல்துறை இயக்குனர் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஸ்பெஷல் ஆப்ரேஷன் என்ற நடவடிக்கையில் அதிரடி வாகன சோதனைகளை செய்ய அறிவுறுத்தியதின்படி, இன்று இரவு மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், திருச்சி மாநகரில் மிக முக்கிய 38 சந்திப்புகளில் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் திடீர் ஸ்பெஷல் கார்ப்பரேஷன் செய்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News April 13, 2025

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்

image

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் அம்மனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். அம்மனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

திருச்சியில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

image

தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

News April 13, 2025

திருச்சியில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை

image

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 100 Machine Operator பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள டிப்ளமோ படித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!