Tiruchirappalli

News October 23, 2024

திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு

image

திருச்சி என்ஐடி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் சென்னையைச் சேர்ந்த நித்தியசெல்வம் என்ற மாணவன் தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வாய் கொப்பளிக்கும் மருந்தை குடித்ததால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக மருந்தை குடித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News October 23, 2024

கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அழைப்பு

image

கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன உற்பத்தியை ஊக்கப்படுத்த தமிழக அரசு “தீவன அபிவிருத்தி” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதில் 2 கால்நடைகள் வைத்து நீர்பாசன வசதியுடன் நிலத்தில் 0.25 ஏக்கர் குறையாமல் தீவன பயிர்களை, பயிரிட்டு பராமரிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

News October 23, 2024

கல்லூரிக்குள் போதையில் ரகளை செய்த 3 பேர் கைது.!

image

துவாக்குடி அரசு கலை கல்லூரியில் இன்று மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத 3 நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தியுள்ளனர்.அங்கு படிக்கக்கூடிய மாணவ,மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.அவர்களை தட்டிக்கேட்க சென்ற துளசிராம்,வைரவளவன் என்ற மாணவர்களை தாக்கி உள்ளனர்.பிறகு,துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து அந்த மூவரையும் கைது செய்தனர்.

News October 23, 2024

திருச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருச்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.10.2024 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரிலோ அல்லது மனுக்கல் மூலமாகவோ தெரிவித்து பயன் பெற கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்

News October 22, 2024

திருச்சியில் நாளை இலவச பரிசோதனை முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர், பீரங்கிகுளம், எடமலைப்பட்டிபுதூர், இருதயபுரம், ஸ்ரீரங்கம், பெரிய மிளகுபாறை, காட்டூர், மேல கல்கண்டார்கோட்டை, தென்னூர், திருவெறும்பூர், உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளை 23ஆம் தேதி மாலை இலவச காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

News October 22, 2024

புத்தகம் வழங்கி வரவேற்ற ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாவில் கலந்து கொண்டு சென்னைக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார்.இவரை திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் சந்தித்து புத்தகம் வழங்கி வரவேற்று வழியனுப்பி வைத்தார்.முதல்வரின் வருகையால் திருச்சி விமான நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News October 22, 2024

திருச்சி-திருவனந்தபுரம் ரயில் சேவை மாற்றம்

image

திருச்சி தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, திருச்சி – திருவனந்தபுரம் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி ரயில்வே மேலாளர் இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

பச்சைமலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய திட்டம்

image

துறையூர் அடுத்த பச்சைமலையில் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி என்ற ஊரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், தமிழ்நாடு அரசின் மூலம் டோம் வடிவிலான தங்குமிட வசதி மற்றும் ஜிப் லைன் போன்ற பொழுதுபோக்கு அம்சத்தை நிறுவுவதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பச்சைமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துவர் என கருதப்படுகிறது.

News October 22, 2024

திருச்சி பிஹெச்எல்லில் வேலை வாய்ப்பு

image

திருச்சி பிஹெச்எல்லில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 650 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஏ, பிகாம் மற்றும் பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்கள். இதற்கு விண்ணப்பிக்க 23-10-24 அன்று இறுதி நாளாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.trichybhel.com என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்

News October 22, 2024

பணியில் ஒழுங்கீனம்: 2 காவலர்கள் சஸ்பெண்ட்

image

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சரியாக பணிகளில் ஈடுபடாத 2 காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன் மதுபோதையில் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் ஏட்டு கொள்ளிடம் செக் போஸ்ட்க்கு செல்லாமல் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் டி.எஸ்.பி. நிவேதா லட்சுமி பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!