India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் உட்பட நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் தேவைப்படும் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் நபர்கள் 1077, 04366-226623 மற்றும் 9488547941 (வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தின் 430 ஊராட்சிகளிலும் மனை பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டிட அனுமதி எளிதாக வழங்க, ஒற்றைச் சாளரை முறையில் விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு உடன் அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. விபரங்களுக்கு www.onlineppa.tn.gov.in தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள 18 வயது நிரம்பியவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி இன்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டிகள் மழையின் காரணமாக சற்று தாமதமாக 11 மணியளவில் துவங்கும் எனவும், பங்கேற்க கூடிய மாணவர்களை பொறுப்பாசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் எனவும் திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ரமேஷ், நீடாமங்கலம் இந்தியன் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார் கடனை முழுமையாக செலுத்திய பின்பும்,ஆர்.சி புத்தகத்தை வழங்காத வங்கி மீது மன்னார்குடி நுகர்வோர் சங்கத்தின் வேல்முருகன் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில், இழப்பீடாக ரூ.1.10 லட்சம் மற்றும் ஆர்.சி புத்தகத்தை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு நேற்று அதிரடி உத்தரவிட்டது
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!
மன்னார்குடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் பெண்களைப் போல் பேசி பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் வழியே ரூ.1.60 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரை திருவாரூர் சைபர் கிரைம் காவல் துறையினர் பிரசாந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 20 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.