India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்த செய்யும் நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 05.10.2024 சனிக்கிழமை அன்று மன்னார்குடி ராஜகோபாலசாமி கல்லூரியில் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் சிறந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை, திருவாரூர் புத்தக திருவிழாவின் போது வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் பங்கேற்க dlothiruvarur@gmail.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
திருக்கண்ணைமங்கை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பக்தவச்சல பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நாளை கண்ணனை கண்டித்த கண்ணன் குற்றவாளி என்கிற தலைப்பில் வழக்காடு மன்றம் நடுவர் அறிவழகன் தமிழில் ஆய்வாளர் நாளை மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களை அச்சுறுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, அவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தலையாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். மன்னார்குடி டிஎஸ்பி ஆய்வின் போது உடன் இருந்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தலைமையில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் 23.09.2024ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது. இதில் தொழிற்பயிற்சி பயிற்சி முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். SHAREIT
வலங்கைமான் வட்டம், தொழுவூர் ஊராட்சியில் இன்று காலை ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். காலை உணவினை சுமையிலிருந்து பெற்று சாப்பிட்டு பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் முறை குறித்து அவர் பார்வையிட்டார்.
மன்னார்குடி அருகே மேலத்திருப்பாலக்குடி எல்ஐசி முகவராக பணியாற்றி வருபவா் செந்தில்குமாா் (52). இவரது மனைவி கவிதா (48). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த செவ்வாய் வீட்டில் தனியே இருந்த கவிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கவிதாவின் தந்தை உலகநாதன் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான் அருகே உள்ள கீழ் மாத்தூர் கிராமத்தில் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரேஷன் கடைக்கு சென்று அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இன்று (செப்.18) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு 29 மனுக்களை அளித்தனர். அதனை பெற்று கொண்ட எஸ்.பி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.