India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் தங்களின் சிறார்களுக்கு “www.ksb.gov.in” என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் மற்றும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் ஆகியவை மயிலாடுதுறை ரயில் நிலையம் யார்டில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11ம் தேதி) முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசினார். இதில் புதிதாக மறுசீரமைப்பிற்குள்ளாகும் வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு குறித்து ஆட்சேபனை ஏதுமிருப்பின் வருகிற 13-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தெரிவிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் நெல் விதை பண்ணை அமைத்திட 670 ஹெக்டர் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல் ,உளுந்து, பச்சை பயிறு விதை பண்ணை அமைத்திட ஆர்வமுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் வட்டார உதவி விதை அலுவலரை தொடர்பு கொண்டு விதைப்பண்ணை அமைத்து உற்பத்தி செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் www.skilltraining.tn.gov.in-ல் தகவல் பெற்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு ஐடிஐ முதல்வரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத கூடுதல் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்திடும் நேர்காணல் தேர்வு முகாம் நடைபெற்றது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்துக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் திருவாரூர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 8-ஆவது சர்வதேச திரைப்படவிழா திருவாரூரில் 5-நாட்கள் நடைபெறுகிறது. இதில் 13- நாடுகள், 22- திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்கு நுழைவுகட்டணம் ரூ.1000/-மட்டும். செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை தைலம்மை மல்டி ப்ளக்ஸ் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.1,95,756/- க்கான காசோலையை 7 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வழங்கி, வாழ்த்து கூறினார்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொறியியல் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருவாரூர் வழியாக செல்லும் தஞ்சாவூர்-மயிலாடுதுறை ரயில் செப்.10,12,14,17,19 ஆகிய தேதிகளிலும், திருவாரூர்-மயிலாடுதுறை ரயில் செப்.11,12,13,14,15 தேதிகளிலும், மன்னார்குடி-மயிலாடுதுறை ரயில் செப்.11,12,13,14,15 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.