Thiruvarur

News November 26, 2024

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News November 25, 2024

வெள்ள மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த திருவாரூர் எஸ்.பி

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பேரிடர் மீட்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (நவ.25) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

News November 25, 2024

மன்னார்குடியில் படகு சவாரி நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

image

மன்னார்குடி நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட படகு சவாரி ஹரித்ரா நதி தெப்பக்குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக துவங்கப்பட உள்ளது. தினசரி மாலை 2:30 முதல் இரவு ஆறு மணி வரை படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 26.11.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார்.

News November 25, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை ‘ரெட்’ அலெர்ட் எச்சரிக்கை

image

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதனால் நாளை (நவ.26) திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 25, 2024

திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News November 25, 2024

திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு, கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.25) மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!

News November 25, 2024

திருவாரூர்: எந்தெந்த பகுதிகளில் நாளை மின்தடை

image

எடமேலையூர், வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வடுவூர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, மேலப்பூவனூர், நத்தம், மேலப்பூவனூர், நத்தம், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை, சேர்மாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி -மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜான்விக்டர் தெரிவித்துள்ளார்.

News November 24, 2024

18 வயது நிரம்பிய அனைவருக்கும் பரிசோதனை: அமைச்சர் 

image

திருவாரூர் மாவட்டம் எண்கண் பகுதியில் ரூ.2.27 கோடி மதிப்பிலான சுகாதார நிலையங்களை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து மாவட்டங்களிலும் 18 வயது நிரம்பியவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வந்த நிலையில், தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.

News November 24, 2024

ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கிய அமைச்சர்

image

பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், திருவாரூர் மாவட்டம் என்கண் பகுதியில் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

News November 24, 2024

கொரடாச்சேரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம், விடயபுரம் சேர்ந்த மோகன் மனைவி ஜெயா (45). விவசாயத் தொழிலாளரான இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயா ஆடுகளை ஜன்னல் கம்பியில் காட்டியுள்ளார். அப்போது அதில் எதிர்பாராத வகையில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!