Thiruvarur

News September 17, 2024

திருவாரூரில் நாளை தொடங்கும் உலக திரைப்பட விழா

image

திருவாரூரில் தமுஎகச பொதுச்செயலாளர் களப்பிரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் உலக திரைப்பட விழா 18-ஆம் தேதி துவங்கி 22-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலை இலக்கிய ஆர்வலர்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

திருவாரூர் எஸ்.பி. காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்

image

திருவாரூர் மாவட்டத்தில் 419 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அவை பல்வேறு நாட்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன அனைத்து நிகழ்வுகளும் அமைதியான முறையில் நடந்து. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3000 காவலர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எஸ்.பி. ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

திருவாரூர் கலெக்டர் மாணவர்களுக்கு விருது வழங்கினார்

image

திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் தனித்திறன்கள் அடிப்படையில், சிறந்த மாணவர்கள் தேர்வுசெய்து காமராஜர் விருது மற்றும் பரிசு தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து இன்று ஆட்சியர் சாரு ஸ்ரீ மாணவர்களுக்கு காமராஜர் விருதுகளை வழங்கினார்.

News September 16, 2024

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித் தொகை வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு நலவாரிய கல்வி உதவித் தொகைக்கான காசோலையை ஆட்சியர் சாரு ஸ்ரீ பயனாளிகளிடம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உடனிருந்தார்.

News September 16, 2024

திருவாரூர்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

image

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 17ஆம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அரசு உரிமம் பெற்ற மதுபான கடைகள் மது கூடங்கள் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்திருக்கிறார். நாளை ஒரு தினம் அனைத்து கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடியிருக்க வேண்டும் எனவும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

திருவாரூரில் உயர்வுக்கு படி திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் திட்டத்தின் உயர்வுக்கு படி என்கிற நிகழ்ச்சி திருவாரூரில் உள்ள வேலுடையார் பள்ளி வளாகத்தில் ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பெறாமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து உயர்கல்வி பெறவைப்பதே இத்திட்டமாகும் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

திருவாரூரில் இன்று உயர்வுக்கு படி சிறப்பு முகாம்

image

திருவாரூா் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி (செப். 16) இன்று நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். செப்.16 தேதி திருவாரூா் வேலுடையாா் அரசு உதவிப் பெறும் பள்ளி நடைபெறும் முகாமில் உயர்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான ஊக்குவித்தல் மற்றும் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

News September 16, 2024

திருவாரூரில் செப்.20 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, தகுதியான கோரிக்கைகளுக்கு தீா்வு காணும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம், செப்.20 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News September 15, 2024

திருவாரூரில் குறும்பட போட்டி

image

திருவாரூரை மையமாகக் கொண்டு செயல்படும் வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் சிறந்த குறும்படத்துக்கான போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து அதிகபட்சம் 3 நிமிடத்திற்குள் உள்ள குறும்படங்களை அனுப்பி வைக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் 9840321522 என்ற எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக தகவலை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

News September 15, 2024

விசிக தலைவர் திருமாவளவன் திருவாரூர் வருகை

image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் இன்று திருவாரூர் நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்வதையடுத்து இன்று மதியம் திருவாரூர் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!