India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிலிருந்து இன்று நவம்பர் 29 மழை அளவு குறைந்துள்ளதால் திருவாரூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடைவிடாமல் கனமழை செய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 333 குடிசை வீடுகள், 72 ஒட்டு வீடுகள் என மொத்தம் 405 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், இளவரசநல்லூரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கும் இன்று (நவ.28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது வரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட முழுவதும் 281.6 மிமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், பள்ளியமேடு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கிட்டத்தட்ட 65 நாட்கள் பயிரானது தற்போது தண்ணீரில் மூழ்கி அழுகத் தொடங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறார்கள். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் பகுதியில் மழை சேதங்கள் உள்ளதா ?
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) காலை 8.30 மணி வரை திருவாரூர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகிற நவம்பர் 30-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அன்றைய தினம் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல்,நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 4 மணி நிலவரப்படி மாவட்டத்தின் மொத்த சராசரியாக 272 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிப்பு ஏற்படக்கூடியதாக கணக்கிடப்பட்டுள்ள 176 பகுதிகளில், 41 பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளாகும், 67 பகுதியில் மிதமான பகுதிகளும், 67 பகுதிகல் குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும் இருந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 225 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று திருவாரூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.