Thiruvarur

News December 25, 2024

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர் சேதங்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் துறையினால் இன்று அறிவிக்கப்படுகிறது. இதனை கட்டாயமாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

News December 25, 2024

மன்னார்குடி அருகே ரூ.7.42 லட்சம் மோசடி

image

மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவரை வாட்ஸப் எண் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வாயிலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.7.42 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து அந்நபரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் திருவாரூர் சைபர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

News December 25, 2024

முத்துப்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை கல்லடிகொல்லை பகுதியை சேர்ந்தவர் விவசாயி, வீரபாண்டியன் (50). இவர் அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் வீரபாண்டியன் மீது போக்ஸோ வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News December 24, 2024

திருவாரூரில் ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (24.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 24, 2024

வலங்கைமான்: பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

image

வலங்கைமான் அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் வலங்கைமான் அருகே ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த மாதவன் எனும் இளைஞர் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மாதவனை தேடி வந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். 

News December 24, 2024

திருவாரூர்: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் டிச.23 முதல் டிச.26 வரையிலான நாட்களில், அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

News December 24, 2024

முத்துப்பேட்டை: திருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது வழக்கு

image

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (22). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது, பழனியைச் சேர்ந்த விவேக் என்பவரை காதலித்துள்ளார். அப்போது விவேக்கின் ஆசை வார்த்தைகளை நம்பியதில் கலைச்செல்வி கருவுற்றார். இந்நிலையில் திடீரென விவேக் திருமணம் செய்ய மறுக்க, கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 23, 2024

திருவாரூர் மாவட்ட ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (23.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

இளம்பெண் கர்ப்பம்: இளைஞர் மீது வழக்கு

image

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (22). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது, பழனியைச் சேர்ந்த விவேக் என்பவரை காதலித்து மூன்று மாதம் கர்ப்பம் ஆக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய மறுத்ததை அடுத்து காவல்துறையினர் விவேக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News December 23, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 125 பேர் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் பல்வேறு சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக பான் மசாலா குட்கா மணல் கடத்தல், ஆன்லைன் லாட்டரி விற்பனை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 125 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். போதையில் வாகனம் ஓட்டிய 58 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!