Thiruvarur

News October 28, 2024

திருவாரூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவாரூரில் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள், பணம் பறித்தல், ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாகும் வகையில் குற்றப் செயலில் ஈடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டக் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

News October 28, 2024

பெருகவாழ்ந்தானில் குற்ற செயலில் ஈடுபட்ட ரவுடி கைது

image

திருவாரூர் எஸ்பி ஜெயகுமார் உத்தரவின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் குற்ற செயலில் ஈடுபட்ட முத்துப்பேட்டை தாலுக்கா பாலையூர் கும்பகர்ணன் தெரு ராஜப்பா மகன் ரவுடி அசோக் (எ) அசோக்குமார் (32) என்பவரை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ரவுடி அசோக் என்பவர் மீது 7 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 28, 2024

திருவாரூரில் விஷவாயு தாக்கி இருவர் பலி

image

திருவாரூரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி மணிமாறன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 28, 2024

திருவாருர் மாவட்டத்தில் 82 பேர் மீது கடும் நடவடிக்கை

image

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம் உட்பட அந்தந்த பகுதி போலீசார் தொடர்ந்து பகல் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டதில் 2 நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 82 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்

News October 27, 2024

திருவாருர் மாவட்டத்தில் மது விற்பனை செய்த 23 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையில் கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்து அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

News October 27, 2024

திருவாருர் மாவட்டத்தில் 40 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதி காவல் சரக போலீசார் தொடர்ந்து பகல் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 40 நபர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.

News October 27, 2024

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த அதிமுக அமைச்சர்

image

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை மற்றும் பூச்செண்டு வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News October 27, 2024

திருவாரூர் ரேஷன் கார்டு தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தீபாவளியை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் உள்ள ஓஏபி அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 27, 2024

ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று (27-10-2024), தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 26, 2024

தமிழகத்தில் 4 லட்சம் டன் நெல் கொள்முதல்: ராதாகிருஷ்ணன் பேட்டி

image

கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதிலும் இந்த ஆண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 928 கோடி பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 56 ஆயிரத்து 883 பேர் பயனடைந்துள்ளனர். குறுவை கொள்முதல் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றார் அவர்.

error: Content is protected !!