India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி – காரைக்கால் இரயில் நெ. 06880, 06490 மற்றும் காரைக்கால் – திருச்சி ரயில் நெ. 06739, 06457 ஆகிய திருவாரூரில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் வழித்தடங்கள் நாகை – நாகூர் இருப்பு பாதை பராமரிப்பு நடப்பதால் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரயில் பயணிப்பவர்கள் நேரத்தை சரி செய்து பயணிக்க கேட்டுக்கொள்ள படுகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசால் வெடிகளை வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், திருவாரூரில் 12 வழக்குகளும், நன்னிலத்தில் 10 வழக்குகளும், மன்னார்குடியில் 15 வழக்குகளும், திருத்துறைப்பூண்டியில் 7 வழக்குகளும், முத்துப்பேட்டை யில் 7 வழக்குகள் என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 51 வழக்குகள் பதிவாகின.
திருவாரூர் நகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்ய இயலாதவர்கள் உடனடியாக அலுவலகத்தில், தேவையான ஆதாரங்களை சமர்ப்பித்து டிசம்பர் 31க்குள் சான்றிதழ் பெறலாம். இனி வரும் காலங்களில் கால அவகாசம் தரப்படாது என இந்திய தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நிர்வாகம் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளது. SHAREIT
மன்னார்குடி நகராட்சி நவம்பர் 1 ஆன இன்று தனது 159ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தின் மிகவும் பழமையான நகராட்சிகளில் முதல் மூன்று இடத்தில் மன்னார்குடி நகராட்சியும் ஒன்று. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட மன்னார்குடி நகராட்சி நகராட்சியாக மாற்றப்பட்டு 159 ஆவது ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூா் கலை பண்பாட்டுத் துறை திருவாரூா் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம்) நவ.10 ஆம் தேதி காலை 9 மணியளவில், வ.சோ. ஆண்கள் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ஆதாா் அட்டை நகலுடன் நேரில் வர வேண்டும். ஷேர் செய்யவும்
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், கடலூர், கரூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் 2023-24ஆம் ஆண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27 பேருக்கு ரூ.2 கோடியே 66 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 15 பேருக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் 2023-24ஆம் ஆண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27 பேருக்கு ரூ.2 கோடியே 66 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 15 பேருக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். SHAREIT
வேளாண் பொறியியல் துறை மூலம் கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுக்கள் கட்டுப்படுத்தும் கருவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். 2024-2025 ஆம் ஆண்டுக்கு 50 சதவீதம் மானியம் பெறலாம். விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பட்டா, ஆதார், புகைப்படம், சிறு குரு விவசாயி சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.