Thiruvarur

News April 2, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News April 2, 2025

திருவாரூர்: 10-ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அறிவிப்பு

image

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே நாளில் நடக்க இருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி  நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 2, 2025

திருவாரூரில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் BRANCH MANAGER பணிக்கான 25 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 -ரூ.25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 2, 2025

திருவாரூர் சென்னை இடையே தினசரி விரைவு ரயில்

image

சென்னையில் இருந்து செங்கல்பட்டு விழுப்புரம் வழியாக வண்டி எண் 16103 -16104 ராமேஸ்வரம் தாம்பரம் இடையே தினசரி விரைவு ரயில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஞாயிறு முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ராமேஸ்வரம் மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும்.

News April 2, 2025

திருவாரூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஏப்ரல்(1) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், அவர்களது குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 2, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் அல்லது 100 செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை<> இங்கு கிளிக்<<>> செய்து அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யது பயனடைய உதவுங்கள்..

News April 1, 2025

உங்க வீட்டு குட்டீஸ்க்கு செம ட்ரீட் கொடுக்க தயாரா?

image

விடுமுறை தொடங்கிய நிலையில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அதன்படி தற்போது திருவாரூரில் மட்டும் இருக்கும் சூப்பர் பிளேஸ் (பொழுதுபோக்கு இடங்கள்) 1.முத்துப்பேட்டை சதுப்புநில காடுகள், 2.வடுவூர் பறவையகம், 3.உதயமார்த்தாண்டபுரம் பறவையகம், 4.மாநகரப் பூங்கா போன்ற இடங்கள் மாவட்டத்தில் இருக்கிறது. குட்டிஸ், குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அனைவருக்கும் Share பண்ணுங்க..

News April 1, 2025

திருவாரூரில் மாற்றுத் தேதிகள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.31) ரமலான் விடுமுறை என்பதால், இன்று குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பிறர் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..

News April 1, 2025

திருவாரூரில் 5 ரவுடிகள் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் குற்றப்பதிவேட்டில் பதியப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீசார் ஒரே நேரத்தில் 50 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சமத்துவபுரத்தை சேர்ந்த அருண்குமார், கட்ட பிரபு, ஆடு குட்டி என்கிற ஆறுமுகம் உள்ளிட்ட 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!