Thiruvarur

News January 12, 2025

திருவாரூர்: ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு

image

திருவாரூரை சேர்ந்தவர் நாகராஜ் (75). ஓய்வுபெற்ற தாசில்தாரான இவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு குடல் கேன்சர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.2.30 செலவாகியுள்ளது. இந்நிலையில் உரிய மருத்துவ காப்பீட்டு இருந்தும் ரூ.93,000 மட்டுமே இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரித்த ஆணையம் நாகராஜுக்கு 9% வட்டியுடன் மீதமுள்ள தொகை மற்றும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

News January 12, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய ரோந்து பணி காவலர்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி 11 இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல்துறையின் உடனடி உதவிக்கு எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News January 11, 2025

திருவாரூரை அருளும் சொர்ணபுரீஸ்வரர்

image

திருவாரூர், வலங்கைமான் அருகே ஆண்டான்கோவில் பகுதியில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோயில், 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தாகும். இத்தலத்தில் உள்ள அம்பிகை தன்னுடைய கணவனாக இறைவனே வேண்டும் என தவம் செய்து திருமணம் செய்ததால் புகழ்பெற்றது. இங்கு ஜாதகம் வைத்து பூஜை செய்தால் அவர்களுடைய திருமண தடை விலகி விரைவில் திருமணமாகும் என்பது ஐதீகம். உங்கள் பகுதியின் புகழ்பெற்ற கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. SHARE IT.

News January 11, 2025

கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது வழக்கு

image

மன்னார்குடி அருகே ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் அருமைநாதன். இவருடைய மனைவி ரேவதி. இந்நிலையில் இருவருக்கும் கடந்த 8-ஆம் தேதி இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருமைநாதன் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி ரேவதி வீட்டிலிருந்த வெந்நீரை எடுத்து அருமைநாதன் மீது ஊற்றியுள்ளார்.இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதியை கைது செய்தனர். 

News January 11, 2025

திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!

News January 11, 2025

வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற 10,12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் பிப்.28 ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 04366-224226 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். 

News January 11, 2025

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது மாபெரும் புத்தகத்திருவிழா வரும்  ஜன.24 முதல் பிப். 02 வரை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் S.S நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. மேலும் அறிவுக்கு விருந்தளிக்கும் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளதால் இதில் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.

News January 11, 2025

முத்துப்பேட்டை: வேன் மோதி விவசாயி

image

முத்துப்பேட்டை அடுத்த தோலி கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (60). விவசாயியான இவர் நேற்று (ஜன.10) பொருட்கள் வாங்க உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவிற்கு வந்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் செல்லக்கண்ணு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

News January 10, 2025

புகையான் நோயால் 1000 ஏக்கர் சம்பா சாகுபடி பாதிப்பு

image

முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு 30,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தற்போது புகையான் நோயால் 1000 ஏக்கருக்கும் மேல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் செய்யவும்

News January 10, 2025

திருவாரூரை அதிர வைத்த படுகொலை பாகம் – 4

image

பூண்டி கலைச்செல்வன் ஆதரவில் டெல்டா பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய முட்டை ரவி, ஒரு வழக்கின் காரணமாக தமிழக காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்படுகிறார். அதன் பிறகு டெல்டா பகுதிகளில் மணல்மேடு சங்கர் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சிறிய கசப்புணர்வு இருந்துள்ளது. இந்த சமயத்தில் தான் மணல்மேடு சங்கர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தொடரும்…

error: Content is protected !!