Thiruvarur

News February 3, 2025

செல்லூர்: மாநில அளவிலான செஸ் போட்டி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம், செல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வரும் பிப்.9 (ஞாயிறு) மாநில அளவில் சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள makemychess.com என்ற இணையதளம் வாயிலாக நுழைவு கட்டணம் ரூ.300-ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9944570585, 9865466683 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். செஸ் விளையாடும் உங்களது நண்பகர்ளுக்கு இதனை பகிரவும்

News February 3, 2025

திருவாரூர் பாஜக நகர தலைவர் கைது

image

திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பாஜக நகரத் தலைவர் மற்றும் பாஜகவினர் செல்வதை தடுக்கும் வகையில், பாஜக திருவாரூர் நகர தலைவர் கணேசனை இன்று காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 3, 2025

ரூ.2 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கிய ஆசிரியர்

image

திருவாரூர் புத்தகத் திருவிழாவில் வீட்டு நூலகம் அமைக்க முத்துப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வசிதம்பரம் 50 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர் செல்வசிதம்பரத்தை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ,  சி.இ.ஓ.ஆர்.சௌந்திரராஜன், கோட்டாட்சியர் சௌம்யா உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர். 

News February 3, 2025

வடுவூர்: சொத்து பிரச்சனையில் அரிவாள் வெட்டு

image

வடுவூா் வடபாதி பகுதியை சேர்ந்தவர்கள் பிச்சையன் (70), கோபால் (66). சகோதரா்களான இவா்களிடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இந்தநிலையில், நேற்று பிச்சையனின் மகன் ரமேஷ் பிரபு (37), வடுவூா் வடபாதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்த போது, அங்கு வந்த கோபாலின் மைத்துநரும், தமாகா பிரமுகருமான சங்கா் (48), ரமேஷ் பிரபுவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் கோபால், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

News February 2, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (பிப்.4) பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திருவாரூர் மடப்புரம், சேந்தமங்கலம், விளமல், விஜயபுரம், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம், அலிவலம், எடையூர், ஓடாசேரி, குமாரமங்கலம், பாண்டி, கட்டிமேடு, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2025

நீடாமங்கலத்தில் இருந்து 2,000 டன் அரிசி அனுப்பி வைப்பு

image

வலங்கைமான் வட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் சன்னரக நெல் மற்றும் 1,000 டன் பொதுரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் வடசென்னைக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

News February 1, 2025

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்: தல வரலாறு (பாகம் 4)

image

பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. திருவாரூர் தேரழகு என்பதுபோல, “மன்னார்குடி மதிலழகு’ என்பது சொல் வழக்காக உள்ளது.

News January 31, 2025

மகளிர் சுய உதவி குழு பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் வரும் பிப்.1 அன்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வதற்காக நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News January 31, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சாருஸ்ரீ, தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார். SHARE NOW !

News January 31, 2025

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 1,124 டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் பிப்.3 முதல் <>cisfrectt.cisf.gov.in<<>> தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!