Thiruvarur

News February 8, 2025

மனுநீதிச் சோழன் நினைவாக அமைக்கப்பட்ட கல்தேர்

image

திருவாரூர் என்றாலே நினைவுக்கு வருவது நீதிக்கு பேர்போன மனுநீதி சோழன். நீதிக்காக தன்னுடைய மகனையே தேரினால் ஏற்றி, நீதி தவறாமல் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டியவர் மனுநீதி சோழன். அவரது நினைவாக, பின்னர் வந்த சோழ மன்னனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கல்லால் ஆன தேர் திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட விளாகத்தில் அமைக்கப்பட்டது. SHARE NOW..

News February 8, 2025

திருவாரூரில் குரூப்-2 தேர்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வு திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் உடன் இருந்தார்.

News February 8, 2025

திருவாரூரில் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 18-40 வயதுக்குட்பட்ட நபர்கள் <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE IT!

News February 8, 2025

திருவாரூர்: டிராக்டர் மீது டூவீலர் மோதியதில் வாலிபர் பலி

image

திருவாரூர் அருகே அரிவளூரை சேர்ந்த கபில்ராஜ் (26), கருப்புரை சேர்ந்த ஸ்ரீராம் (25) ஆகியோர் சம்பவத்தன்று இரவு ஒரு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல அணக்குடி என்ற இடத்தில் சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது. பனிமூட்டம் அதிகாமாக இருந்த காரணத்தால் டிராக்டர் நிற்பது தெரியாமல் இளைஞர்கள் ஓட்டிவந்த டூவீலர் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 7, 2025

ராஜேந்திர சோழன் காதலிக்காக கட்டிய கோயில்

image

காதல் நினைவு சின்னம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான். ஆனால் தமிழகத்தில் தமிழகத்தில் தாஜ்மஹாலுக்கு முன்பே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட காதல் சின்னம் பற்றி தெரியுமா?. ராஜேந்திர சோழன் தன் காதலி பரவை நங்கையின் வேண்டுகோளை ஏற்று திருவாரூரில் கட்டிய திருவாரூர் தியாகேசர் கோயில் தான் அது. தொடரும்..SHARE NOW.

News February 7, 2025

அறுவடை இயந்திரங்களின் விவரங்களை அறியலாம்: கலெக்டர்

image

திருவாரூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூா் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்று வரும் வேளையில், மொத்தம் 4,456 தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் தொடா்பு விவரங்கள் மாவட்ட வாரியாக ‘உழவன்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில், இவ்விவரங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

News February 7, 2025

திருவாரூர்: போலி பாஸ்ப்போர்ட்டில் வந்தவர் கைது

image

மன்னாா்குடி புள்ளிக்கோட்டை, கீழத் தெருவை சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (55). இவா் சிங்கப் பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட வழக்கமான சோதனையில் அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருச்சி விமான நிலைய போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.

News February 6, 2025

சோழர்களின் அசைக்க முடியாத கோட்டை திருவாரூர்

image

திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக தியாகராஜர் கோயில் கல்வெட்டுகளின் மூலம் நாம் அறியலாம். மேலும் திருவாரூர் சோழர் காலத்தில் மிகவும் பாதுகாப்பான நகரமாகவும், விவசாயத்தில் சிறந்து விளங்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் !

News February 6, 2025

மகனுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் மனு

image

கூத்தாநல்லூரை சேர்ந்த கணேசன் மகன் கவியரசன், சிங்கப்பூர் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், தங்கள் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாகை பாராளுமன்ற உறுப்பினரை இன்று (பிப்.6) நேரில் சென்று மனு அளித்தனர். மேலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

News February 6, 2025

நீடாமங்கலம்: காலை சிற்றுண்டியில் கிடந்த பல்லி

image

நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (பிப்.6) காலை மாணவ, மாணவியர்கள் 14 பேருக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. அப்போது பொங்கலில் பல்லி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் மாணவர்களை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்நிலையில் கலெக்டர் மோகனசந்திரன் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

error: Content is protected !!