India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை சாலை நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிப்.22இல் நடைபெறுகிறது. அதில் டிகிரி, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் வரை படித்தவர்கள் சுயவிவரம், ஆதார் கல்வி சான்று நகலுடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்த படிவத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசியாவிலேயே பெரியத் தேர் என்ற பெருமைமிக்கது. இந்த திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.07 அன்று தொடர்ந்து 5ஆவது ஆண்டாக ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது.
திருவாரூர் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை சாலை நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிப்.22இல் நடைபெறுகிறது. அதில் டிகிரி, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் வரை படித்தவர்கள் சுயவிவரம், ஆதார் கல்வி சான்று நகலுடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்த படிவத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட நபர்கள் என மொத்தம் 4 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இன்று தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டாசோல்) வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (பிப்.10) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இள.செல்வமணிக்கு, நேற்று (பிப்.9) திருச்சியில் தமிழக பண்பாட்டுக் கழகம் நடத்திய 29ஆவது விருது வழங்கும் விழாவில் “ராஜகலைஞன்” விருதினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். விருது பெற்ற தலைமை ஆசிரியர் இள.செல்வமணியை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோர் பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் இன்று (பிப்.10) முதல் பிப்.14ஆம் தேதி வரை விவசாயிகளின் நில விவரங்களைப் பதிவு செய்ய உள்ளனர். எனவே விவசாயிகள் நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மானியத்திட்டங்கள், பயிர் கடன்கள், அனைத்து திட்ட உதவிகளும் எளிதாக கிடைக்கும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். SHARE NOW.
நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குமார் (30) கடந்த 7ஆம் தேதி இரவு சிறிய கத்தியால் தனது இடது கையில் 7 இடங்களில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். தற்போது அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் தியாகராசர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்தி பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை சிவலீலைகளை விளக்கும் விதமாகவும், திருவாரூர் பெருமைகள் சொல்லும் விதமாகவும் வரையப்பட்டன. அங்கு சுமார் 96 ஓவியங்கள் உள்ளன.
ஆலத்தம்பாடியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் பண்ருட்டியை சேர்ந்த அய்யனார் (35), நாகை நத்தப்பள்ளத்தை சேர்ந்த அய்யப்பன் (30) ஆகியோரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.