Thiruvarur

News February 10, 2025

 தலைமை ஆசிரியருக்கு “ராஜகலைஞன்” விருது

image

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இள.செல்வமணிக்கு, நேற்று (பிப்.9) திருச்சியில் தமிழக பண்பாட்டுக் கழகம் நடத்திய 29ஆவது விருது வழங்கும் விழாவில் “ராஜகலைஞன்” விருதினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். விருது பெற்ற தலைமை ஆசிரியர் இள.செல்வமணியை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோர் பாராட்டி வருகின்றனர்.

News February 10, 2025

நில விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் இன்று (பிப்.10) முதல் பிப்.14ஆம் தேதி வரை விவசாயிகளின் நில விவரங்களைப் பதிவு செய்ய உள்ளனர். எனவே விவசாயிகள் நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மானியத்திட்டங்கள், பயிர் கடன்கள், அனைத்து திட்ட உதவிகளும் எளிதாக கிடைக்கும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். SHARE NOW.

News February 10, 2025

நீடாமங்கலம் காவலர் தற்கொலை முயற்சி

image

நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குமார் (30) கடந்த 7ஆம் தேதி இரவு சிறிய கத்தியால் தனது இடது கையில் 7 இடங்களில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். தற்போது அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர் கடந்த மாதம் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 9, 2025

திருவாரூரில் 400 ஆண்டுகள் பழமையான மூலிகை ஓவியங்கள்

image

திருவாரூர் தியாகராசர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்தி பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை சிவலீலைகளை விளக்கும் விதமாகவும், திருவாரூர் பெருமைகள் சொல்லும் விதமாகவும் வரையப்பட்டன. அங்கு சுமார் 96 ஓவியங்கள் உள்ளன.

News February 9, 2025

ஆலத்தம்பாடி: அடகு கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது

image

ஆலத்தம்பாடியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் பண்ருட்டியை சேர்ந்த அய்யனார் (35), நாகை நத்தப்பள்ளத்தை சேர்ந்த அய்யப்பன் (30) ஆகியோரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.

News February 8, 2025

மனுநீதிச் சோழன் நினைவாக அமைக்கப்பட்ட கல்தேர்

image

திருவாரூர் என்றாலே நினைவுக்கு வருவது நீதிக்கு பேர்போன மனுநீதி சோழன். நீதிக்காக தன்னுடைய மகனையே தேரினால் ஏற்றி, நீதி தவறாமல் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டியவர் மனுநீதி சோழன். அவரது நினைவாக, பின்னர் வந்த சோழ மன்னனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கல்லால் ஆன தேர் திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட விளாகத்தில் அமைக்கப்பட்டது. SHARE NOW..

News February 8, 2025

திருவாரூரில் குரூப்-2 தேர்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வு திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் உடன் இருந்தார்.

News February 8, 2025

திருவாரூரில் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.22-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 18-40 வயதுக்குட்பட்ட நபர்கள் <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE IT!

News February 8, 2025

திருவாரூர்: டிராக்டர் மீது டூவீலர் மோதியதில் வாலிபர் பலி

image

திருவாரூர் அருகே அரிவளூரை சேர்ந்த கபில்ராஜ் (26), கருப்புரை சேர்ந்த ஸ்ரீராம் (25) ஆகியோர் சம்பவத்தன்று இரவு ஒரு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல அணக்குடி என்ற இடத்தில் சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது. பனிமூட்டம் அதிகாமாக இருந்த காரணத்தால் டிராக்டர் நிற்பது தெரியாமல் இளைஞர்கள் ஓட்டிவந்த டூவீலர் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 7, 2025

ராஜேந்திர சோழன் காதலிக்காக கட்டிய கோயில்

image

காதல் நினைவு சின்னம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான். ஆனால் தமிழகத்தில் தமிழகத்தில் தாஜ்மஹாலுக்கு முன்பே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட காதல் சின்னம் பற்றி தெரியுமா?. ராஜேந்திர சோழன் தன் காதலி பரவை நங்கையின் வேண்டுகோளை ஏற்று திருவாரூரில் கட்டிய திருவாரூர் தியாகேசர் கோயில் தான் அது. தொடரும்..SHARE NOW.

error: Content is protected !!