Thiruvarur

News February 12, 2025

வடபாதிமங்கலத்தில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி மூன்றாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை 13.02.25 (வியாழன்) காலை வடபாதிமங்கலம் சாதனா திருமண மண்டபம், சாத்தனூர் மீனாட்சி அம்மன் திருமண மண்டபம், திருராமேஸ்வரம் அரசு நடுநிலை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வைத்து பயன்பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 12, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

திருவாரூர் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திரு வி கா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன் மாணவர் விருதகிரி இன்று (பிப்.12) திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் விடுதி வசதிகள் மற்றும் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

News February 12, 2025

இந்தியாவில் சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல்நிலையம் தேர்வு

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தினை இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை சிறந்த காவல் நிலையத்திற்கான சான்றிதழை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் முத்துப்பேட்டை போலீசாரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், மாவட்ட எஸ்.பி கருண் கரட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News February 11, 2025

திருவாரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் போட்டி

image

திருவாரூர் வேலுடையார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பேட்மிட்டன் அகாடமி நடத்தும் திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான ‘சிவ வடிவேல் உடையார் நினைவு சிலம்பம் போட்டி 2025’ வரும் 23.02.25 (ஞாயிறு) காலை திருவாரூர் வேலுடையார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 93613-10360, 86105-10259 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 11, 2025

திருவாரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

திருவாரூர் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை சாலை நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிப்.22இல் நடைபெறுகிறது. அதில் டிகிரி, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் வரை படித்தவர்கள் சுயவிவரம், ஆதார் கல்வி சான்று நகலுடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்த படிவத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 11, 2025

திருவாரூர் ஆழித்தேர் திருவிழா தேதி அறிவிப்பு

image

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசியாவிலேயே பெரியத் தேர் என்ற பெருமைமிக்கது. இந்த திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.07 அன்று தொடர்ந்து 5ஆவது ஆண்டாக ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது.

News February 11, 2025

திருவாரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

image

திருவாரூர் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை சாலை நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிப்.22இல் நடைபெறுகிறது. அதில் டிகிரி, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் வரை படித்தவர்கள் சுயவிவரம், ஆதார் கல்வி சான்று நகலுடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்த படிவத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

News February 10, 2025

மாவட்டத்தில் 4.42 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கல்

image

திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட நபர்கள் என மொத்தம் 4 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இன்று தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டாசோல்) வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். 

News February 10, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று (பிப்.10) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!