Thiruvarur

News August 6, 2025

திருவாரூர்: விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

image

தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம், நீடாமங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் விவசாயிகளுக்கு 20 எக்டேருக்கு மானிய விலை மக்காச்சோளம் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படத் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்காச்சோளம் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் இடுபொருட்களைப் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

திருவாரூர் மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்.

HELLO POLICE

9384039633

CONTROL ROOM

SB OFFICE

9498181220

9498100865

News August 5, 2025

திருவாரூர்: தேர்வு இல்லை, அரசு வேலை, Apply Now

image

திருவாரூர்: தமிழ்நாடு அரசில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலை வேண்டுமா? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய அறிவிப்பு வந்துள்ளது. ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும். முதுகலை பட்டம் பெற்று விருப்பமுள்ளர்கள் 13.08.2025 ஆம் தேதிக்குள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அரசு வேலைக்கு நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க!

News August 5, 2025

திருவாரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். தகவலை SHARE பண்ணுங்க.

News August 5, 2025

திருவாரூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

image

திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் <>இந்த லிங்கிள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து<<>>, 26.08.2025 தேதிக்குக்குள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

News August 5, 2025

திருவாரூர்: இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

image

உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.05) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகையால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் மேல/கீழ திருப்பாலக்குடி, கண்டிதம் பேட்டை, தளிக்கோட்டை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், கருப்பாயி தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2025

திருவாரூர்: மாதம் சம்பளம் 1 லட்சம் Miss பண்ணாதீங்க!

image

திருவாரூரில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்காம். ஆக.,17ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்!

News August 4, 2025

திருவாரூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! (மேலும் தகவலுக்கு <<17030943>>பாகம் 2<<>>)

News August 4, 2025

திருவாரூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

News July 11, 2025

திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி

image

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கவும், மேலும் தகவல்களுக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். SHARE செய்ங்க புதிய தொழில் தொடங்குங்க.

error: Content is protected !!