India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (பிப்.19) கொண்டாடப் பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகன சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் உ.வே.சாவின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதில் வட்டாட்சியர் ஶ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களாக கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ள சந்தையில் மது விற்பனை, அண்டை மாநில மது கடத்தல், சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 65 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் சனிக்கிழமை 22.02.2025 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவாரூர் புதுத்தெருவில் உள்ள நியூ பாரத் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
இன்று பிப்.17, திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் துவங்கி நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான அனைத்து துறை தலைமை அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.வி.மோகனச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் பிப்.19ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் பிற்படுத்த உறுப்பினர்களுக்கு கடன் உதவி முகாம் நடைபெற இருக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் திருவிடச்சேரி என்ற ஊரில் (16.02.25) மாலை நன்னிலத்திலிருந்து குடவாசல் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள புத்தாற்றில் இறங்கியது. இதில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பாதிப்புமில்லை.ஆபத்தான ஆற்று ஓரங்களில் தடுப்புச்சுவர் அரசு அமைத்து தந்தால் இது போன்ற சம்பவத்தை தடுக்கலாம் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். இதில் திருவாரூர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், ஶ்ரீவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பேரளம் ஆகிய பகுதிக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலங்கைமான், ஏரிவேளூர் ரேஷன் கடையில், தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தவறாமல் ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.