India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅இறை வழிபாடு
✅நேர்த்திக்கடன்கள்
✅தாலி சரடு மாற்றுதல்
✅ஆடிப்பெருக்கு வழிபாடு
✅கூழ் படைத்தல்
✅விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
திருவாரூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
குடவாசல் ஒன்றியம் திருவீழிமிழலை சரகத்திற்கு உட்பட்ட கூந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் முதலிய பயிற்சிகளை மாணவ மாணவிகளுக்கு அளித்து வரும் தன்னார்வலர் ரவி பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தலைமை ஆசிரியை தேவி மற்றும் உதவி ஆசிரியை பயனாடை அணிவித்து பாராட்டினர்
திருத்துறைப்பூண்டி குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்பரை உயர்நிலைப்பள்ளி பள்ளி குண்டு எறிதல் போட்டியில் அரசு மாணவி வைஷிகா முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். மேலும் தொடர் ஓட்டத்தில் சரண், விதுல், தரன், காலியாகுமார் மூன்றாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் தீபா மூன்றாம் இடமும், தடை தாண்டுதல் போட்டியில் நட்சத்திர ஓவியா மூன்றாம் இடமும் பெற்றனர்.
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
தட்சிணாமூர்த்தி சுவாமிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்து விட்டு இறுதிக் காலத்தில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். இதில் வியப்பானது என்னவென்றால் இவரின் சமாதி இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது. இவரது ஜீவசமாதி மேலே ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதனை தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் துறை மற்றும் இலக்கிய வளர்ச்சிக் கழகம் இணைந்து நடத்தும், மூன்று நாள் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி திறன் வளர்க்கும் பயிற்சி கருத்தரங்கம், சமூக பணித்துறை கருத்தரங்க கூட்டத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக 7) இரவு 10 மணி முதல் நாளை(ஆக 8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூர், வண்டாம்பாளை ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் ஆக.31 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
திருவாரூர், நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.