India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி விளையாட்டு மன்றத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவுசெய்து பயன்பெற வேண்டும். உபகரணங்களை பயன்படுத்தி விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூரில் தனியார்துறைவேலை வாய்ப்பு முகாம் இன்று (பிப்.22) நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலைநாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை (பிப்.22) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW.
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மன்னச்சநல்லூரில் அமைந்துள்ளது பூமிநாத சுவாமி கோயில். இங்கு சிவபெருமான் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். சொந்த வீடு வாங்க,புதிய வீடு கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கள்,நிலம் மனை விற்பதில் தடை,சொத்து வழக்கு பிரச்சனை உள்ளிட்ட 16 விதமான மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு சக்தி வாய்ந்த ஸ்தலமாக இது விளங்குகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின்( phh-Ayy) ரேஷன் கடையில் e-kyc விரல் ரேகை பதிவு செய்வதற்காக வட்டாரம் வாரியாக அந்தந்த ரேஷன் கடையில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார் அதன்படி24.2.2025 அனைத்து ரேஷன் கடைகளிலும் அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது இதற்கு கண்காணிப்பு அலுவலரையும் அவர் நியமித்துள்ளார்
திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையாளர்கள் விருது 2024 வழங்கப்பட இருக்கிறது. இது தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் 100 பேர்க்கு தலா ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. விருதுபெறவிண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி நாள் ஆகும். விருது பெறத் தகுதியானவர்கள் www.tnpcb.gov.in பெற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
திருவாரூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.22) நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட விவசாய குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிப்.28ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பதிலளிக்க உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். SHARE NOW>
திருவாரூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் இன்று பிப்.20 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது என வருவாய் கோட்ட அலுவலர் சௌமியா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தவறாமல் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (பிப்.19) கொண்டாடப் பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகன சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் உ.வே.சாவின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதில் வட்டாட்சியர் ஶ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.