India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்ட செய்தி குறிப்பில், டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான தேர்வு வரும் ஜூன். 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம், வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கார்ஹிகான்ட், டேராடுன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்டு ஈரல், எலும்பு துண்டுகளை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார்.
முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டையை வான்நோக்கி வீசுவார்கள். காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டு ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர். அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்பப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் (விரைவு) நீதிபதி எம்.மாணிக்கம் பதவி உயர்வு பெற்று பணி மாறுதல் ஆகி உள்ளதால் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <
தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழா பந்தக்கால் முகூர்த்தம் கடந்த 11ஆம் தேதி நடந்தது. மார்ச் 15ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறுகிறது. தேரோட்ட விழாவையொட்டி ஆழித்தேரின் நகரும் கண்ணாடி கூண்டு பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிடைமருதூர் , தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில். மறுபிறவி இல்லாதவர்களே இக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பது ஐதீகம். ஆண்டிற்கு இரு முறை சிவராத்திரி மற்றும் மாசி மகத்தில் மட்டும் திறக்கப்படும் சூரிய மண்டல வாசல் வழியாக விஸ்வநாதரை தரிசிக்கும் பக்தர்களுக்கு 21 தலைமுறை சாபம் நீங்கும், சிவராத்திரியான இன்று மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை சூரிய மண்டலவாசல் திறந்திருக்கும்.
தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை(பிப்.27) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை மறுநாள் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28.02.25 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சி.பி.ஐ கட்சியின் சேதனிபுரம் கிளை செயலாளர் அன்பழகன் மகன் அஜித்தை கடத்தி 22 நாட்களுக்கு பின் தூக்கிட்டு கொலை செய்த குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27 வியாழன் காலை 10 மணிக்கு சேதனிபுரம் கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் S.A. டேவிட் ராஜ் தலைமையில் சாலை மறியல் நடைபெற உள்ளது.
இன்று (பிப்.25) ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டத்தில் 2360 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். தற்செயல் விடுப்பு எடுத்தோர் எண்ணிக்கையில் திருவாரூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? என்பது தற்போது பலரின் பேசு பொருளாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.