Thiruvarur

News March 19, 2025

ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழி தேரோட்டம் 2025 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார். மேலும், இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 19, 2025

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்திய மாதர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 18, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

திருவாரூர் மாவட்ட விவசாயிகளே 31ஆம் தேதி தான் கடைசி

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த வருவாய் கிராமங்களில் நடைபெற்று வரும் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாமில், விவசாயிகள் தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் ரூ.6000 கிடைக்கும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் இதற்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணபிக்கவும். இதை SHARE பண்ணுங்க.

News March 18, 2025

திருவாரூர் ஆழித்தேர் அதிசயங்கள்

image

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியதாகும். பூதப்பார், சிறு உறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் என 7 அடுக்குகளைக் கொண்ட தேரின் 4ஆவது அடுக்கில்தான் தியாகராஜர் வீற்றிருப்பார். மேலும் குந்தியாலம், கொடியாலம், பாம்பு பாலம் உட்பட மொத்தம் 92 அலங்காரங்கள் தேருக்குச் செய்யப்படும். தியாகராஜர் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 18, 2025

கோடை வெயிலில் தற்காத்துக் கொள்ள கலெக்டர் அறிவுரை

image

திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிகமாக இருக்கிறது. எனவே வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்ற ஜூஸ்கள் அருந்த வேண்டும், முதியோர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வழங்கியுள்ளார். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..

News March 17, 2025

Way2News எதிரொலி: முத்துப்பேட்டை அருகே சாலை சீரமைப்பு

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் இருந்து மேலப் பெருமழை செல்லும் இணைப்பு சாலையானது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையினால் மிகுந்த சேதமடைந்தது. இதுகுறித்து கடந்த மார்ச்.16 ஆம் தேதி Way2News-இல் செய்தி வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தற்போது சாலையோரத்தில் மண் மூட்டைகளை அமைத்து சீரமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். SHARE NOW!

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்!

image

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <>இதை கிளிக்<<>> செய்து மார்ச் 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

மன்னார்குடி செங்கமலத்திற்கு ரூ.14 லட்சத்தில் கருங்கல் சிலை

image

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் 50ஆண்டுகள் ஆன்மிக பணியாற்றி மறைந்த செங்கமலம் யானைக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நிறுவப்பட உள்ள கருங்கல் யானை சிலை நேற்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் ஆன்மிக பணியாற்றி மறைந்த யானைகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்: திருவாரூர் ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!