India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த வலங்கைமான் சந்திரசேகரபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திகேயன் (40) என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த 22 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை வலங்கைமான் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கைப்பற்றினர்.
தமிழ்நாடு மத்திய பல்கலை., திருவாரூரில் இயங்கி வருகிறது. இதில் காலியாக உள்ள ரிசர்ச் அசிஸ்டன்ட் பதவிக்கு தகுதியான நபரை நாளை 06.05.24 (திங்கட்கிழமை) நேரில் விண்ணப்பிக்க ( வாக் இன்) எம்பில், பிஎச்டி, எம்ஏ படித்து இருக்க வேண்டும் எனவும். இதில் தேர்ச்சி பெற்றால் சம்பளம் ரூ.37 ஆயிரம் வரை கிடைக்கும் என மத்திய பல்கலை., வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி ரோட்டரி சங்கம் மீனாட்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் மீனாட்சி சூரிய பிரகாஷ் முன்னிலை வகித்தார் 210 பேரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் 68 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்து செல்லப்பட்டனர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை 12ஆம் தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியுள்ள +2 மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை https//www.dge.tn.nic.in/ ல் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
2024-25 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் சேர்க்கைக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 7,8,9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் சேர மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 10,11 தேதிகளில் திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு முன் வரும் 8 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 % இலவச சேர்க்கைக்கு மே.20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். rte.tnschools.gov.in இந்த இணைய தளம் மூலமாகவோ அல்லது மாவட்டத்தில் உள்ள கல்வி துறையின் அலுவலகங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்கான முடிவுகள் மே.27 ஆம் தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகள் முழுவதும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் தட்பவெட்ப நிலை மாற்றத்தின் காரணமாக கோடை காலம் துவங்கி. இன்று கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் அதிகப்படியான வெப்பம் 120 டிகிரிக்கு மேலாக அடித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக அரசு மருத்துவமனை முதல் கீழப்பாலம் வரை 1200 மீ தூரத்திற்கு சுமார் 3.20 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏழு மீட்டர் அகலமுள்ள சாலை 10 மீட்டர் அகலமாக மாற்றபடுவதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன் தெரிவித்தார்.
முத்துப்பேட்டையிலுள்ள அலையாத்தி காடுகள், திருவாரூர்- தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினியாறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய ஆறுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனப்படுகிறது. இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மே 1 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை மேலும் மே 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.. கட்டணம் ரூ 400. மேலும் விவரங்களுக்கு 04366-269407 என்கிற ஆலய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.