India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து அகர ஓகை அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த பெரும் விபத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக புதிய பேருந்து இயக்கம் செயல்முறைப்படுத்தப்பட்டு உள்ளன. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் உள்ளிட்ட பல ஊர்களின் வழியாக இயக்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 9) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமானது மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.08) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபரங்கள் மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅இறை வழிபாடு
✅நேர்த்திக்கடன்கள்
✅தாலி சரடு மாற்றுதல்
✅ஆடிப்பெருக்கு வழிபாடு
✅கூழ் படைத்தல்
✅விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
திருவாரூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
குடவாசல் ஒன்றியம் திருவீழிமிழலை சரகத்திற்கு உட்பட்ட கூந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் முதலிய பயிற்சிகளை மாணவ மாணவிகளுக்கு அளித்து வரும் தன்னார்வலர் ரவி பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தலைமை ஆசிரியை தேவி மற்றும் உதவி ஆசிரியை பயனாடை அணிவித்து பாராட்டினர்
திருத்துறைப்பூண்டி குறு வட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்பரை உயர்நிலைப்பள்ளி பள்ளி குண்டு எறிதல் போட்டியில் அரசு மாணவி வைஷிகா முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார். மேலும் தொடர் ஓட்டத்தில் சரண், விதுல், தரன், காலியாகுமார் மூன்றாம் இடமும், ஈட்டி எறிதல் போட்டியில் தீபா மூன்றாம் இடமும், தடை தாண்டுதல் போட்டியில் நட்சத்திர ஓவியா மூன்றாம் இடமும் பெற்றனர்.
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.