India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோதண்டராம கோயில். 108 வைணவத் தலங்களுள் ஒன்றான இக்கோயில் ராம சேத்திரங்களில் ஒன்றாகும். திராவிடக் கட்டடக்கலைகளை பிரதிபலிக்கும் இத்தலம், புராணக்கதைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில், ராமர் கோயில்களுள் சிறப்பாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அனுமன் சன்னதிக்கு பின்புறம் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. ராமர் கோதண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி பத்தாம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் உதவியோடு உடனடியாக மின் இணைப்பு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவாரூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் :இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும்.மேலும் விபரங்களுக்கு இந்த <
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நன்னிலம் பகுதியில் 6 செ.மீட்டரும், திருவாரூர் பகுதியில் 2 செ.மீட்டரும், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், பாண்டவையார் தலை ஆகியன் பகுதிகளில் 1செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 15/5/24 அன்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 18.05.24 (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மே.15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மன்னார்குடியில் 13 செ.மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 6 செ.மீட்டரும், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, குடைவாசல் ஆகிய பகுதிகள் 5 செ.மீட்டரும், வலங்கைமானில் 4 செ.மீட்டரும், திருவாரூர், திருவாரூர் AWS ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.
Sorry, no posts matched your criteria.