Thiruvarur

News May 25, 2024

பழங்குடியின மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளி நாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையவழியில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

News May 25, 2024

திருவாரூர்: பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கைது

image

குடவாசல் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரான மதுசூதனன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்கட்சி பிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News May 25, 2024

திருவாரூர்: பாதுகாப்பு பணி… ஆய்வுசெய்த எஸ்பி

image

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவில்
தெப்ப திருவிழாவின் இறுதி நாளான நேற்று (மே 24) பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கக் கூடும் என்பதால் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெப்பம் செல்லக்கூடிய கமலாலய குளத்தின் நான்கு கரைகளை நேரில் ஆய்வு செய்து, பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

News May 24, 2024

திருவாரூர் அருகே 4 பேர் கைது

image

நன்னிலம் வட்டம் பேரளம் காவல் உதவி ஆய்வாளர் காந்தி கோவிந்தஞ்சேரி பகுதியில் இன்று வாகன சோதனை ஈடுபட்டிருந்தார். அப்போது காரைக்காலிருந்து ரகுமாத்திரன் என்பவர் ஒட்டி வந்த காரை மறித்து சோதனை செய்த பொழுது அதில் 92 பாண்டிச்சேரி மது பாட்டில்கள், 19 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரகுமாத்திரன் ராஜேந்திரன்,ராஜேஷ், பாண்டியன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

News May 24, 2024

திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று(மே 23) நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 21 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அந்தந்த போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

News May 24, 2024

விவசாயிகளுக்கு திருவாரூர் கலெக்டர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி பயிர் 39,710 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக பருத்தி வயல்களில் நீர் தேங்கி காணப்படுகிறது. நீர் தேங்கி இருப்பதால் பருத்திப் பயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்திட அதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி நீரை வடிய வைத்து பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.

News May 24, 2024

திருவாரூர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சிமிலி பகுதியை சேர்ந்த ஜோதிவேல் என்பவருடைய மனைவி ஆனந்தவல்லி(64). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று(மே 23) மோகன் என்பவரது வயலில் கத்தரிக்காய் பறிக்கும்போது விஷமுள்ள பாம்பு கடித்து ஆனந்தவல்லி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 23, 2024

விளக்கொளியில் மின்னும் 16 கால் கோயில் மண்டபம்

image

வைணவ கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் முன்பாக 16 கால் மண்டபம் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி கவனிப்பாரற்று இருந்தது. தற்போது பொறுப்பு ஏற்று உள்ள அறங்காவலர் குழு தலைவர் முயற்சியால் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு மின் இணைப்பு தரப்பட்டு விளக்கொளியில் மின்னுகிறது. பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு பாராட்டுகள் தெரிவிக்கின்றனர்.

News May 23, 2024

திருவாரூரில் 7 மணிவரை மிதமான மழை

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பாதுகாப்பு

image

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா (22.05.2024 – 24.05.2024) வரை மூன்று நாட்கள் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி பலப்படுத்தபட்டது

error: Content is protected !!