Thiruvarur

News May 20, 2024

மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

image

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

News May 20, 2024

சட்ட தன்னாா்வலா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவாரூரில் சட்ட தன்னாா்வலா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எம்.சாந்தி தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அதன் கீழ் இயங்கும் வட்ட சட்ட பணிக் குழுவுக்கு 50 சட்ட தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

News May 20, 2024

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்கு மாணவ மாணவிகள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜுன் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

News May 20, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் சரகம், அத்திக்கடை சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவுதிடீர் ஆய்வு செய்தார்கள் மேலும், CCTV Camera-வை ஆய்வு செய்து பணியில் இருந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும், சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்

News May 19, 2024

திருவாரூர் எஸ். பி திடீர் ஆய்வு

image

திருவாரூர் , நாகப்பட்டிணம் மாவட்ட எல்லை, கானூர் சோதனைச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று (19.05.2024) திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, பணியில் இருந்த காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களுக்கு சோதனைச்சாவடி பணியின் முக்கியத்துவம் குறித்தும் வாகன தணிக்கை செய்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

News May 19, 2024

திருவாரூர்: தனியார் பள்ளியில் சேர நாளை கடைசி நாள்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள இன்று செய்தி குறிப்பில், மாவட்டத்தில் அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச சேர்க்கைக்கு நாளைக்குள் (20.05.24) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இணைய வழியாகவும், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலம், மற்றும் வட்டார கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News May 19, 2024

மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாள அறிவுரை

image

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மின் சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் எனவும், அதன்படி ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை பயன்படுத்தவும், பிரிட்ஜ் கிரைண்டர் போன்றவற்றிக்கு உரிய முறையில் எர்த் கொடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் லலிதா மகேஷ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.

News May 19, 2024

திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை திருவாரூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 19, 2024

திருவாரூரில் மாவட்ட எஸ்.பி. திடீர் ஆய்வு

image

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் இரயில்வே நிலையம் அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று போக்குவரத்து நெரிசல் பற்றியும், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அவர் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News May 18, 2024

திருவாரூர் அருகே 6 பேர் கைது

image

நீடாமங்கலம் பகுதியில் பழக்கடை வைத்துள்ளவர் அப்பு இவர் திருச்சிக்கு பணம் வாங்க அவரது நண்பரின் ஆட்டோவில் சென்ற பொழுது அவரை நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த வினோத், ராஜமுருகன் ஆகிய இருவரும் கொலை செய்தனர். இந்நிலையில். 28.4.24 அன்று நடைபெற்ற சம்பவத்தில் நேற்று ஆறு நபர்களை கைது செய்து போலீசார் மீது வழக்கு தொடரப்பட்ட சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!