Thiruvarur

News May 24, 2024

திருவாரூர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சிமிலி பகுதியை சேர்ந்த ஜோதிவேல் என்பவருடைய மனைவி ஆனந்தவல்லி(64). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று(மே 23) மோகன் என்பவரது வயலில் கத்தரிக்காய் பறிக்கும்போது விஷமுள்ள பாம்பு கடித்து ஆனந்தவல்லி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 23, 2024

விளக்கொளியில் மின்னும் 16 கால் கோயில் மண்டபம்

image

வைணவ கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் முன்பாக 16 கால் மண்டபம் நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி கவனிப்பாரற்று இருந்தது. தற்போது பொறுப்பு ஏற்று உள்ள அறங்காவலர் குழு தலைவர் முயற்சியால் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு மின் இணைப்பு தரப்பட்டு விளக்கொளியில் மின்னுகிறது. பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு பாராட்டுகள் தெரிவிக்கின்றனர்.

News May 23, 2024

திருவாரூரில் 7 மணிவரை மிதமான மழை

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பாதுகாப்பு

image

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா (22.05.2024 – 24.05.2024) வரை மூன்று நாட்கள் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி பலப்படுத்தபட்டது

News May 23, 2024

மன்னார்குடி அரசு பள்ளிக்கு பாராட்டு

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் புதிதாக +2 தேர்வு மையம் துவங்கி +2 தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகில பாரத ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ மாதவ குருசாமி பாராட்டி பரிசுகளை இன்று வழங்கினார்.

News May 22, 2024

குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்1 தேர்வு ஜூன் 13ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளவர்கள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 27ஆம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News May 22, 2024

திருவாரூர்: உலக புகழ் பெற்ற பிரம்மாண்ட தெப்ப திருவிழா

image

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழி தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று இரவு முதல் 3 தினங்கள் நடைபெற உள்ளது. இந்த தெப்ப திருவிழாவில் ஒரே நேரத்தில் 800 பேர் அளவிற்கு பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட தெப்பத்தில் 400 நபர்கள் வரை பொதுமக்கள் பயணிக்க காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News May 22, 2024

திருவாரூர்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பருத்தி மற்றும் எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News May 22, 2024

திருவாரூர்: இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

திருவாரூர் இளைஞர்களுக்கு விருது வேண்டுமா..

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர்கள் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்பட உள்ள நிலையில் தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in பதிவு செய்யுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!