Thiruvarur

News March 31, 2025

திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன் மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News March 31, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

image

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு,  முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.. 

News March 31, 2025

திருவாரூர் மக்களே ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

திருவாரூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 31, 2025

திருவாரூர்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 இலவச பயிற்சி துவக்கம்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன் மேலும் http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News March 31, 2025

திருவாரூர்: அரசு அதிகாரி மீது சி.பி.ஐ வழக்கு

image

காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே.ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் அவரது மனைவி விமலா பணியாற்றி வருகிறார். அவர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவிற்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

News March 30, 2025

திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தேர்வில் மாற்றம்

image

திருவாரூர் மாவட்ட தொடக்க பள்ளிகளில் 1முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 09 முதல் 21 வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு வருகின்ற ஏப்ரல் 07 முதல் 17 வரை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

News March 30, 2025

திருவாரூர்: அரசு அதிகாரி மீது சி.பி.ஐ வழக்கு

image

காரைக்காலில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் திருவாரூரைச் சேர்ந்த கே. ரவிச்சந்திரன் மற்றும் திருவாரூரில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வரும் அவரது மனைவி விமலா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.11 கோடி அளவுக்கு சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

News March 30, 2025

திருவாரூர்: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

News March 30, 2025

தேரோடும் வீதியில் அகிரப்பு அகற்ற நகராட்சி அறிவிப்பு

image

திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் வெளியிட்ட செய்திகுறிப்பில், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழா வருகிற 7ஆம்தேதி நடைபெறுகிறது. அதன் காரணமாக தேர்வலம் வரக்கூடிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் 2ஆம் தேதி நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு, அதற்கான செலவினம் சம்பந்தபட்டவரிடம் வசூல் செய்யபடும் என அறிவித்திருந்தார். SHARE NOW!

News March 30, 2025

பெண்கள் பாதுகாப்பு சட்ட குழு அமைக்க கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் பெண்கள் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக 4 பேர் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும் என ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு குழு அமைக்காத நிறுவனங்கள் மீது ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்ட விவரத்தினை http://www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுரை.

error: Content is protected !!