Thiruvarur

News August 20, 2024

திருவாரூரில் பெண் கொலை குறித்து எஸ்.பி பேட்டி

image

திருவாரூர் மாவட்டம் பவுத்திரம் மாணிக்கம் பகுதியில் 18ஆம் தேதி அன்று பிரபாவதி என்ற பெண்ணின் கழுத்தை அறுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்று சந்தோஷ் என்று 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகை பணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

News August 20, 2024

திருவாரூரில் பெண் கொலை – 2 பேர் கைது

image

திருவாரூர் அருகே இலவங்கார்குடி பகுதியில் நேற்று இரவு பிரபாவதி (40) என்ற பெண்மணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே ஊரில் கேபிள் டிவி நடத்தி வரும் சந்தோஷ் (25) அவரது சகோதரர் சஞ்சய் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரிடம் இருந்து பிரபாவதியின் செல்போன் மற்றும் தாலி செயின் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News August 20, 2024

ஈரப்பதத்தை 22%-ஆக உயர்த்த வேண்டும்

image

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் மூலம் கொள்முதல் செய்யும் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு ஈரப்பதம் சதவீதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 20, 2024

திருவாரூர் மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வருகின்ற 24ஆம் தேதி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நூலகம், பூங்காக்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தூய்மை பணியினை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளில் காலை நேர வழிபாட்டு கூட்டத்தின் போது தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 20, 2024

திருவாரூர் மாவட்டத்தை முன்னேற்றுவோம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “விரைவில் திருவாரூர் மாவட்டம் முதன்மை மாவட்டம் ஆக வாய்ப்புள்ளது. ஒரு பானை சோற்றக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மன்னார்குடியில் மட்டுமே ஆயிரத்து ஐநூறு கோடிக்கு திட்டங்கள் குவிந்துள்ளன. நீடாமங்கலம் மேம்பாலம் போன்ற முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.

News August 20, 2024

திருவாரூரில் பெண்கள் நீதி கேட்டு போராட்டம்

image

கொல்கத்தாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நேற்று மாலை சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட கன்வீனர் மாலதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News August 19, 2024

திருவாரூரில் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள 18-40 வயதுடைய வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW!

News August 19, 2024

திருவாரூரில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பேட்டி

image

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுகலை பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மேற்கு வங்கத்தின் மாநில அரசு நேர்மையான முறையில் நீதி விசாரணை செய்ய வேண்டும் என திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

News August 19, 2024

Way2News எதிரொலியால் மழைநீர் வடிகால் மூடும் பணி தீவிரம்

image

திருத்துறைப்பூண்டி வட்டம், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் மழைநீர் வடிகால் கட்டி மூடப்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட்.18) Way2News செயலியில் செய்தி வெளியாகியது. அதன் எதிரொலியாக இன்று உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகாலை மூடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 19, 2024

டெமு ரயிலை மானாமதுரை வரை இயக்க கோரிக்கை

image

மன்னார்குடி டூ மானாமதுரை வரை டெமு ரயில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் முயற்சியில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கடந்த எட்டு மாதங்களாக மானாமதுரை செல்லாமல் காரைக்குடி வரை மட்டுமே செல்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த ரயிலை மீண்டும் மானாமதுரை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!