India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ள இப்போட்டிகளில் பங்குபெற http://sdat.in/cmtrophy/player-login/ என்ற இணைய முகவரியில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் கலை அறிவியல் கல்லூரி . மத்திய பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி, ஐடிஐ, மருத்துவம், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட 4,054 விண்ணப்பங்களில் 500 மாணவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஏடிஎம் கார்டு மற்றும் உயர்கல்வி வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 102 அங்கன்வாடி, 105 பள்ளிகளில் உள்ள 19 வயது நிரம்பிய சுமார் 34,000 மாணவ, மாணவிகளுக்கு சுகாதார துறை சார்பில் நேற்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பூச்சி மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிள்ளிவளவன் தலைமையில் சுகாதார துறையினர் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இனிது கல்வி அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து குழந்தைகளுக்கான தற்போதைய கல்வி தர திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்ப்பதற்கும், மேம்பாட்டு திட்டங்களை வடிவமைக்கவும் இந்த அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
திருவாரூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக ஐந்து நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.
திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார், சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்துக்களை தடுக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாருர் புதிய பேருந்து நிலையத்தில் 2 ஒளிரும் மின் விளக்குகள் உள்ளிட்ட விபத்துக்கள் நடைபெறும் பல்வேறு சாலைகளில் மொத்தம் 18 ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை நேரில் சந்தித்து நேற்று மாலை மனு அளித்தனர். வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 601 இடங்களில் விநாயகர் வைத்து வழிபட உள்ளதாகவும் செப்டம்பர் 7 முதல் 15ஆம் தேதிக்குள் 13 இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் பட்டியலிட்டு வழங்கினர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (22.08.2024) இரவு மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து, காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்
மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்
திருவாரூரில் வரும் செப்டம்பர் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் த.மு.எ.க.ச சார்பாக ‘8 ஆவது சர்வதேச திரைப்பட விழா’ நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும், அதில் கலந்து கொள்ளும் முக்கிய திரைப்பட எழுத்தாளர்கள், கலைஞர்களை வரவேற்பது குறித்தும் திருவாரூரில் நடைபெற்ற த.மு.எ.க.ச ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.