Thiruvarur

News July 3, 2024

 ரயில்வே பணிமனை வேண்டும் என நாகை எம்பி கோரிக்கை

image

நாகப்பட்டினம் எம் பி வை.செல்வராஜ் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்னவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் திருவாரூர் ரயில் சந்திப்பில் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதால் அனைத்து ரயில்களுக்கான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும், திருவாரூர்,காரைக்குடி வழித்தடத்தை மின்மயமாக்குதல் வேண்டும், காரைக்கால் திருவாரூர், தஞ்சாவூர் தடத்தினை இரட்டைவழிப் பாதையாக அமைத்திடவும் கோரிக்கை வைத்தார்.

News July 2, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

News July 2, 2024

இந்து முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளர் கைது

image

திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை அருகே உள்ள கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நாடிமுத்து, இந்து முன்னணி திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து மத ரீதியான கருத்துகளையும், இந்து மற்றும் முஸ்லீம்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் நேற்று(ஜூலை 1) போலீசார் அவரை கைது சிறையில் அடைத்தனர்.

News July 1, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை – 2024 நேரடி சேர்க்கையின் மூலம் நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது நேரடி சேர்க்கைக்கு 01.07.2024 முதல் 15.07.2024 வரை இணையதளத்தில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்ட நிர்வாக அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், ஓட்டுநர், பல்நோக்கு சுகாதார செவிலியர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் (தலா ஒன்று) ஒப்பந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 15.07.2024. மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் திருவாரூர் வருவாய் கோட்ட உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 04.07.24(வியாழன்) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்திட வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 1, 2024

இந்திய மாணவர் சங்கம் நாடு தழுவிய போராட்டம்

image

திருவாரூர் மாவட்டம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேசிய தேர்வு முகமையில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து, நாடு தழுவிய போராட்டம் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று இன்று அறிவித்துள்ளது. மேலும் மத்திய பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்பு போன்ற துறைகளுக்கு நுழைவுத் தேர்வு என்ற முறையில் குளறுபடி செய்யும் NTA என்ற அமைப்பை கண்டித்து மாவட்ட தலைநகரம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

News July 1, 2024

இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்கம்

image

திருவாரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் இன்று முதல் இல்லம் தேடிக் கல்வி மையங்களை தொடர்ந்து நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க நிலை மையங்கள் (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ) மட்டுமே இந்த 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் தொடர்ந்து இயங்கும் என இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News June 30, 2024

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் சேவை

image

திருவாரூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் கால அட்டவணை ரயில்வே துறை அறிவித்துள்ளது. வண்டி எண் 16362 வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில் வாரம் இருமுறை ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்படும். திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, சிவகாசி, தென்காசி வழியாக எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; திருவாரூர் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி காலை 11 மணியளவில் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குறைகளுக்கான மனுக்களை நேரில் வழங்கி நிவாரணம் பெறலாம் என குறிப்பிட்டிருந்தார்.

error: Content is protected !!