Thiruvarur

News July 21, 2024

திருவாரூரில் பேருந்து வழித்தடம் மாற்றம்

image

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. எனவே மயிலாடுதுறை, காரைக்கால், சென்னை செல்லும் பேருந்துகள் புதுப்பாலம் இ.பி. ஆபிஸ் வட கண்டம் வழி செல்லுமாறும், அந்த ஊர்களில் இருந்து திருவாரூர் வரும் பேருந்துகள் கங்களாஞ்சேரி வடக்குவீதி அலங்கார் இன், இ.பி. ஆபிஸ் வழியாக வருமாறும் போக்குவரத்து துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

News July 21, 2024

தமிழக அளவில் சிறப்பிடம் பிடித்த திருத்துறைப்பூண்டி காவல்துறை

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைத்பூண்டி சட்டம்-ஒழுங்கு காவல்நிலையம் 22 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டமைக்காக, தமிழக அரசு அதனை சிறந்த காவல் நிலையம் என அறிவித்துள்ளது. இதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை சென்னையில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலிடம் திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் வரும் ஜுலை.24 ஆம் தேதி பெற உள்ளார்.

News July 20, 2024

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்களைப் வென்ற திருவாரூர் வீரர்

image

அகில இந்திய அளவில் சப்-ஜூனியர் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நேற்று(ஜூலை 19) நடைபெற்றது. இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரசெல்வம் செந்தில்குமார் நீளம் தாண்டுதலில் 5.13மீ தாண்டி வெள்ளி பதக்கத்தையும், குண்டு எறிதலில் 8.6மீ தூரம் எரிந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார்.

News July 20, 2024

அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

திருவாரூர் மாவட்டம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ மின்சார கட்டண உயர்வு மற்றும் நியாய விலை கடைகளில் பொருட்களை நிறுத்துவதற்கு முயற்சி செய்வது ஆகிய காரணங்களுக்காக திமுக அரசை கண்டித்து வருகின்ற 23.07.2024 அன்று திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 60 அபிவிருத்திஸ்வரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறையின் சார்பில் இன்று(ஜூலை 19) மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திருமதி சாரு ஸ்ரீ வழங்கினார். அப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் உடன் இருந்தார்

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 19, 2024

திருவாரூர் ஆதிதிராவிட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு உதவியாக அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், நடப்பு நிதியாண்டிற்கு 24 பேருக்கு ரூ.3,09,30,000 ஒதுக்கப்பட்டு, எந்திரங்கள் வாங்க 35% மூலதன மானியமும் 6 % வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரும்புவோர் <>https://www.msmeonline.tn.gov.in/<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

திருவாரூர்: மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

அரசுப் பள்ளி மாணவருக்கு ரூ.50,000 பரிசு

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு போட்டியில், திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு பள்ளி மாணவர் பாவேஷ் பிரசன்னா முதலிடம் பிடித்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று (ஜூலை.18) முதலிடம் பிடித்த மாணவருக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ரூ.50,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

News July 18, 2024

முன்னாள் படைவீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25/07/2024 அன்று மாலை 4 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்ளாக அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!