Thiruvarur

News September 4, 2024

மாணாக்கர்களுக்கான கல்வி கடன் முகாம்

image

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை வங்கி இணைந்து எதிர்வரும் 06.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி கடனுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. கல்வி கடன் முகாமில் அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்: திருவாரூர் எம்எல்ஏ பங்கேற்பு

image

திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

News September 4, 2024

திருவாரூரில் ஆசிரியர்கள் 8 பேருக்கு விருது

image

திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் மாநில அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகி உள்ளனர் தேவி (மன்னார்குடி), கோமதி(ஆலங்கோட்டை), தங்கபாபு(கோட்டூர்), சிவகுமார் (நன்னிலம்), வேணுகோபால் (சேரன்குளம்), ராஜலட்சுமி (திருவாரூர்), மணிகண்டன் (செல்லூர்), முருகையன் (புத்தகரம்) ஆகியோர் நாளை சென்னையில் விருதினை பெற உள்ளனர்.

News September 4, 2024

திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தில் 2 பள்ளிகள் தேர்வு

image

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமை பள்ளி என்கிற பெயரில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தேர்வாகி உள்ளன. புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் ரூ 20 லட்சம் பெறுகின்றன.

News September 4, 2024

திருவாரூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி

image

திருவாரூரில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 418 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கவும் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலத்தை முடிக்குமாறும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன் என்று எஸ்பி தெரிவித்தார்.

News September 3, 2024

வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை செப்டம்பர் 3 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் நகராட்சி பொறியாளர் மற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News September 3, 2024

திருவாரூரில் 8-ஆவது திரைப்பட விழா

image

திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்தும் 8-ஆவது சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை திருவாரூர் தைலம்மை திரையரங்கில் நடைபெற உள்ளது. இதில் 11 நாடுகளை சேர்ந்த 22 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 5 நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவின் டிக்கெட் ஒன்றின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

திருவாரூரில் நாளை இலவச இருதய நோய் சிகிச்சை முகாம்

image

திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கே.எஸ்.சிவவடிவேல் 46-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவாரூர், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இலவச இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை முகாம் நாளை (செப்.4) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் வேலுடையார் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

News September 3, 2024

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய மட்டன் விலை

image

திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.3) நிலவரப்படி: மட்டன் கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையிலும், எழும்பு கறி ரூ.500 முதல் 700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் கறி ரூ.800 முதல் 1000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

News September 2, 2024

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வாஞ்சியம் மாணவர்கள்

image

திருவாரூர் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து 14 மற்றும் 17 வயதிற்குப்பட்டோர் பிரிவில் வாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் கலைவாணனையும் தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

error: Content is protected !!