India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் இன்று, தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசாங்கத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன கோஷங்கள் எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்களுக்கு பிரதமர் கிசான் திட்ட நிதி வாங்கியதால் 543 மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக 8000 வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று 10 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தருவதாக கூறியதால் கலைந்து சென்றனர். இதனால் 3மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26/7/2024 அன்று வெள்ளிக்கிழமை கூட்டுறவு நகர் பகுதியில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. பட்டதாரி இளைஞர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து, முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர், ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26 7 2024 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் எனவும் இக்கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எனவே விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சாரி ஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு கு சண்முகநாதன் அவர்கள் உடன் இருந்தார்.
திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருவாரூர் ரயிலடியில் இன்று தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் தலைமை வகித்தார். மின்சார கட்டண உயர்வு மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய தமிழ்நாடு அரசை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட அமமுக வினர் கண்டன முழக்கங்கள் எழுப்ப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகுதியுடைய தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம். இதில் மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.25000 பரிசும், தகுதியுரையும் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கடனாக ரூ.15 லட்சம் வழங்கப்படும். கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது ரூ.375000 மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையம் அல்லது 04366 290518 என்ற தொடர்பு கொள்ளலாம்.
திருவாரூர், மன்னார்குடி அருகே உள்ள புள்ளவராயன்குடிகாட்டை சேர்ந்தவர் ஜெகதீசன்(19). கடந்த ஆண்டு அர்ஜெண்டினாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இந்தோனேசியாவில் நாளை(ஜூலை.23) தொடங்கும் ஆசிய வாலிபால் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னுரிமை எண் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 22ஆம் தேதியன்று ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாட ஆசிரியர்களுக்கு 1 முதல் 300 வரையிலான எண்களுக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கு 1 முதல் 25 வரையிலான எண்களும் உள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.