Thiruvarur

News August 4, 2024

நண்பன்னா என்னான்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 3,90,621 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

News August 4, 2024

திருவாரூர்: வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

image

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தொழில் ஆணையர் மற்றும் இயக்குனர் நிர்மல்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு, அனைத்து தரப்பினரும் பயன் அடைகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணித்து உரிய காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

News August 3, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் (ஆகஸ்ட்.3) இன்று மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், பொது மக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

News August 3, 2024

முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு எம்.பி. பரிசளிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பரிசுகள் வழங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளை பாராட்டினார். தலைமை ஆசிரியர் பாலாஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கயல்விழி பொய்யாமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News August 3, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW!

News August 3, 2024

வறண்டு கிடக்கும் ஆறுகளால் ஏமாற்றத்தில் மக்கள்

image

மேட்டூர் அணை நிரம்பி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 3 நாட்கள் கடந்தும் கூட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனால் ஆடிப்பெருக்கை கொண்டாட ஆவலுடன் இருந்த திருவாரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆற்றில் ஒரு சொட்டுநீர் கூட இல்லாத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா திருவாரூர் மாவட்டத்தில் களையிழந்து காணப்பட்டது.

News August 3, 2024

கணவனை அடித்து கொன்ற மனைவி

image

திருவாரூர் அருகே உள்ள அகர திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தராசு(57). கட்டட தொழிலாளி. இவரது மனைவி லீலாவதி(47).. இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். காத்தராசு நேற்றிரவு குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த லீலாவதி இரும்பு கம்பியால் தாக்கியதில் காத்தராசு பலியானார். இதுகுறித்து திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லீலாவதியை கைது செய்தனர்.

News August 3, 2024

திருவாரூர் 6 மாதம் கால அவகாசம்

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்த, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக ஆக.1 முதல் 31.01.2025 வரை ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார்.

News August 2, 2024

ஆடிப்பெருக்கில் தாலிக்கயிறு மாற்றுவது ஏன்?

image

சங்க நூல்களில் பெண்கள் நதியை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது. ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் புது வெள்ளம், புது நீரில் சுமங்கலி பெண்கள் குறிப்பாக புதுமணப் பெண்கள் தாலி கயிறை மாற்றிக்கொள்வது மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

error: Content is protected !!