India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம் ரயில் நிலைய பணிகள் காரணமாக மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 14,15,16,17 ஆகிய தேதிகளில் மட்டும் செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்.
சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 15,16,17 தேதிகளில் மட்டும் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு SEED“ (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு சலுகை திட்டங்கள் உள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் www.dwbdnc.dosje.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக திருவாரூர் மாவட்டத்திலிருந்து மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் ரயில் மூலம் செல்வதற்காக நேற்று இரவு ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கொரடாச்சேரி பெருமாளகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(41). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு திருவாரூர் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்த நிலையில், இந்த வழக்கில் மகிளா விரைவு நீதிபதி ராஜ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர்கள் கூட்டம் நடத்தி பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்யுமாறு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இன்று முதல் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆக-2 அன்று நடைபெறும் பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள செய்யுமாறு தலைமையாசிரியர்களை முதன்மை கல்வி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி வீடுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டார். பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமெய்ச்சூர் , வடபாதி பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் பாண்டீஸ்வரன் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் இன்று (29.07.24) நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குழந்தை திருமணங்கள் குறித்து பெறப்பட்ட புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து மேற்கொள்ளவும், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நிரம்பியுள்ளதை அடுத்து நேற்றைய தினம் அணை திறக்கப்பட்டது. இதனால் டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் விதைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் போன்றவற்றை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் உடனடியாக தூர்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஒன்றிய அரசு மின்சார கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இன்று 29.07.2024 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கேசவராஜ் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திருவாரூர் மாவட்டத்தில் வக்ப் வாரியத்தில் பதிவு செய்து பணியாற்றும் உலமாக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25ஆயிரம் ருபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அரசு மாணியம் வழங்கப்படும் என்றும், தகுதி உடையவர்கள் இதற்க்கான விண்ணப்பங்கள் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.