India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடியில் இன்று வேளாண் விலை பொருட்களுக்கான, ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கத்தினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். அதனை அடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை கண்காட்சியினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் அரசு துறை அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கத்தை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண் இணை இயக்குனர் வணிகம் சாருமதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், வேளாண் உற்பத்தியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமான பங்கேற்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (37). கூலி தொழிலாளியான இவர், நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க, அதே பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 4-ஆம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் சாருஸ்ரீ கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்ததில் இதுவரை மொத்தம் 3,98,148 பேர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும், நாளை முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ள தோல் கழலை தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
வக்பு வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியாக தமிழ்நாட்டை சேர்ந்த 18-45 வயதுடைய நபராக இருத்தல் அவசியமாகும். வாகனத்தின் விலையில் 50% அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து அகஸ்தியம்பள்ளி வரை நாளை அதிவேக ஆய்வு ரயில் வினாடிக்கு 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இருப்பு பாதைகளை கடப்பதையோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கு தகுதியுடைய தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.