Thiruvarur

News August 2, 2024

திருவாரூர்: புதிய மாநில பொதுச்செயலாளர் நியமனம்

image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார். அதன்படி கட்சியின் புதிய மாநில பொதுச்செயலாளராக குடவாசல் எஸ்.தினகரனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 64 வயதாகும் இவர் கடந்த 1983-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 2, 2024

திருவாரூர்: ரூ.16,500 கோடி கடன் வழங்க முடிவு

image

மன்னார்குடி அருகே நேற்று ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்குவதற்கு ரூ.16,500 கோடி இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார் என கூறினார்.

News August 2, 2024

நீடாமங்கலம் அருகே கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

image

நீடாமங்கலம் ஆதனூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினையும், கோவில் வெண்ணி கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் பொருட்களின் இருப்பு விவரமும், பொருட்கள் வாங்கவந்த குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் குறித்தும் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

News August 1, 2024

மன்னார்குடி பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கல்

image

மன்னார்குடி தாலுகா பாமணி உரக்கிடங்கில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் 11.53 லட்சம் மதிப்பீட்டில் 5 டிராக்டர்களை பயனாளிகளுக்கு இன்று கூட்டுறவு நுகர்வோர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் வழங்கினர்.

News August 1, 2024

மன்னார்குடியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

image

மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் 20 கோடியே 90லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 33000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கை உணவு மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

News August 1, 2024

ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி ஆய்வு

image

திருவாரூர் புலிவலம் பகுதி அரசு வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று மாவட்ட மேற்பார்வையாளர், முன்னாள் ஆட்சியர் நிர்மல்ராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூ ஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

image

திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொருட்கள் இருப்பு விவரம் குறித்த பதிவேடு, பொருட்கள் தரம் குறித்து கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் ஐஏஎஸ் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ இருவரும் திடீர் ஆய்வு செய்தனர்.

News August 1, 2024

பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு

image

சம்யுக்த கிசான் மோர்சா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், MS.சுவாமிநாதன்‌ குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க கூடாது என கேட்டுக் கொண்டார்.

News August 1, 2024

விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

திருவாரூர் கலெக்டர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து கல்லணை நேற்றைய தினம் திறக்கப்பட்டது. இந்த நீரை கொண்டு விவசாயிகள் யாரும் புதிதாக குறுவை சாகுபடி பணிகளை தொடங்க வேண்டாம். மேலும் சம்பா சாகுபடியை ஆகஸ்ட் 2-ஆவது வாரம் தொடங்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சம்பாவுக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

News August 1, 2024

பள்ளி மாணவர்களுக்கு எஸ்பி அறிவுரை

image

மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் எஸ்.பி. ஜெயக்குமார் இன்று சிறப்புரையாற்றினார். இதில் போதைப் பொருள் பயன்படுத்தக்கூடாது, செல்லிடப்பேசிகளை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், சைபர் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். இதில் தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!