Thiruvarur

News August 3, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW!

News August 3, 2024

வறண்டு கிடக்கும் ஆறுகளால் ஏமாற்றத்தில் மக்கள்

image

மேட்டூர் அணை நிரம்பி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 3 நாட்கள் கடந்தும் கூட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனால் ஆடிப்பெருக்கை கொண்டாட ஆவலுடன் இருந்த திருவாரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆற்றில் ஒரு சொட்டுநீர் கூட இல்லாத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழா திருவாரூர் மாவட்டத்தில் களையிழந்து காணப்பட்டது.

News August 3, 2024

கணவனை அடித்து கொன்ற மனைவி

image

திருவாரூர் அருகே உள்ள அகர திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தராசு(57). கட்டட தொழிலாளி. இவரது மனைவி லீலாவதி(47).. இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். காத்தராசு நேற்றிரவு குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த லீலாவதி இரும்பு கம்பியால் தாக்கியதில் காத்தராசு பலியானார். இதுகுறித்து திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லீலாவதியை கைது செய்தனர்.

News August 3, 2024

திருவாரூர் 6 மாதம் கால அவகாசம்

image

திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்த, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக ஆக.1 முதல் 31.01.2025 வரை ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார்.

News August 2, 2024

ஆடிப்பெருக்கில் தாலிக்கயிறு மாற்றுவது ஏன்?

image

சங்க நூல்களில் பெண்கள் நதியை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது. ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் புது வெள்ளம், புது நீரில் சுமங்கலி பெண்கள் குறிப்பாக புதுமணப் பெண்கள் தாலி கயிறை மாற்றிக்கொள்வது மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

News August 2, 2024

திருவாரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உட்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடன் மாவட்ட முழுவதும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

News August 2, 2024

திருவாரூர் வருகை தந்த தமிழக டி.ஜி.பி

image

நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று திருச்சி மத்திய மண்டலம், திருச்சி மாநகர காவல் துறையுடன் தமிழ்நாடு மத்திய கழகம் மற்றும் மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையம் இணைந்து போலீஸ்கான மகிழ்ச்சி திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜீவால் கலந்து கொண்டு மகிழ்ச்சி புத்தகத்தை வெளியிட்டார்.

News August 2, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

News August 2, 2024

திருவாரூர் ஆழி தோரோட்டம் பணி மும்முரம்

image

திருவாரூர் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கமலாம்பாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29.07.2024. ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கமலாம்பாள் ஆழி தேரோட்ட திருவிழா வரும் (06.08.24) செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதனையொட்டி தேர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது.

News August 2, 2024

சார்பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமை இயங்கும்

image

பொதுமக்களின் வசதி கருதி இனி சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இனி விடுமுறை நாளான சனிக்கிழமை நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கும். விடுமுறை நாள் ஆவண பதிவு கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க அரசு அறிவித்துள்ளதாக மாவட்ட சார்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!