India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்ட விழா நாளை (ஏப்.7) நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகரில் உள்ள 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை ஆழித்தேரோட்ட திருவிழா முன்னிட்டு இயங்காது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். SHARE NOW!
திருவாரூர் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
திருவாரூர் தேர்த் திருவிழாவிற்கு தனி சிறப்பு உள்ளது. 1748 இல் நடந்த ஆழித் தேரோட்டம் பற்றி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆவணங்கள் உள்ளது. 1927ஆம் ஆண்டு இந்த தேர் முற்றிலும் தீயில் எரிந்தது. அப்போது 10,000 பேர் கூடி தேரை இழுத்ததாகவும், அதில் 10 சக்கரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தேர் 7 அடுக்குகளுடன், 96 அடி உயரமும், சுமார் 300 டன் எடையும் கொண்டதாகும். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க
திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள Godown incharge பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
பி.எம் கிசான் உதவி பெரும் விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாளம் எண்ணை பெற விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றுடன் பொது சேவை மையங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். (SHARE பண்ணுங்க)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பொங்குசனீஸ்வரர் கோயிலில் பணி புரியும் செயல் அலுவலர் ஜோதி (40), கோயில் எழுத்தர் சசிக்குமார் (50) என்பவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி நேற்றுமுன்தினம் கைதானார். இந்நிலையில் ஜோதியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, நேற்று இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல இணை ஆணையர் வே.குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். முத்துப்பேட்டையில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தொடங்கி நாகை கோடியக்கரை வரை நீண்டுள்ளது. கடந்த வருடம் இந்த அலையாத்திக் காடுகள் நடுவே வனத்துறை சார்பில் ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்கள் வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..
தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW
திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE
திருவாரூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச நீட் (NEET) போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏப்.03 முதல் மே.02 வரை புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்களுக்கு 9843545343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.