India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னால் அமைச்சருமான ஆர்.காமராஜ் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை திருவாரூர் விளமல் தங்கவேல் திருமண மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஆக.13) நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாரூர் நகரம், விளமல் தெற்கு வீதி, விஜயபுரம், முகந்தனூர், அம்மையப்பன், கொரடாச்சேரி, அத்திக்கடை, அலிவலம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருவாரூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு 21 முதல் 40 ஆகும். மேலும், கல்வித் தகுதி என்பது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் (Agristnet) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 56 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகம் நம்ம திருவாருரில்தான் இருக்கிறது. 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2009ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், பல விமர்சனங்களுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது. 27 துறைகள் கொண்ட இப்பல்கலை., வாயிலாக டெல்டா மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையிலான விரைவு பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் இயக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொலைதூரம் பயணிக்கும் மக்களின் சுமையை குறைக்க சுமார் 15 கி.மீ தூரம் குறைவதுடன், 2 மணி நேரத்திற்குள் செல்லும் நிலை உருவாகும். அதனோடு, கூடுதலாக ஏ.சி. பேருந்துகளும் இயக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
நாகப்பட்டினம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் வரும் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை கோட்டத்தில் உள்ள நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அஞ்சலகத்தில் கொடி விற்கப்படுகிறது.
திருவாரூர் விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் மடிவழகன், இன்று(ஆக.,11) சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை நேரில் சந்தித்தார். முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
முத்துப்பேட்டை ஆசாத்நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று குயில் ஒன்று காக்கைகள் கொத்தி உயிருக்கு போராடியது. இதனை மருத்துவர் சையது அபுதாகிர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, இன்று 2-வது நாளாக கால்நடை மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இன்னும் இரண்டு நாளில் குணமாகி நல்ல நிலைக்கு வந்து பறக்கும் என மருத்துவர் கூறினார்.
திருமக்கோட்டை நல்லான்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. நேற்று இரவு வீட்டில் இருந்த போது அவரது மருமகன் தாமஸ்க்கும் சின்னப்பாவிற்கும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த தாமஸ் அரிவாளால் சின்னப்பாவை வெட்டிவிட்டு தப்பியோடினார். சின்னப்பாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் தாமஸை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.