India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவராக விருப்பமுள்ளவர்கள், ஏழ்மையான ஆதரவற்ற கைம்பெண்கள் கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 கோழி குஞ்சுகள் வாங்க 50% மானியத்தில் ரூபாய் 1600 வழங்கப்படும். மேலும் 30% ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர். நிலம் குற்ற வழக்குகள் கையாள்வது குறித்து எஸ் பி அறிவுரைகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (09.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி 37 மனுக்களை அளித்தனர். அதனை நேரடியாக பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நேற்று நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாருர் நகரம், வடகண்டம், திருக்கண்ணமங்கை, பவித்ரமாணிக்கம், வண்டாம்பாளை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், குளங்கள் ஏரிகள் நிரம்பி வழிகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cutn.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் 10.10.2024 அன்று பின்னத்தூர் ஊராட்சியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மழையின் காரணமாக சங்கேந்தி அன்பு திருமண மண்டபத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுதினம் முதல் (அக்.10) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.