India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளரின் மகள் துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற நிலையில். தற்போது திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக தமிழக முதல்வர் அரசாணை வழங்கி சிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதற்கான அரசாணையை துர்கா இன்று பெற்றுக்கொண்டார்.
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் அசேஷம் ஊராட்சி சிங்கங்குளம் மற்றும் சேரன்குளம் இடையே பாமணி ஆற்றின் குறுக்கே ரூ 6.06 கோடி மதிப்பீட்டில் PMGSY திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை மூலம் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணியினை இன்று தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு கோட்டாட்சியர் கீர்த்தனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் மத்திய அரசாங்கத்தால் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரையின்படி 1.1.2000க்கு முன்னர் பிறப்பு பதிவு செய்யப்பட்டு 1.1.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்தும் பிறப்பு பதிவுகளிலும் பெயரைச்சேர்த்து குழந்தை பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற டிச.31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
திருவாரூரில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் மத்திய அரசாங்கத்தால் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்வில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரையின்படி 1.1.2000க்கு முன்னர் பிறப்பு பதிவு செய்யப்பட்டு 1.1.2000 தேதியிலிருந்து 15 ஆண்டுகள் கடந்தும் பிறப்பு பதிவுகளிலும் பெயரைச்சேர்த்து குழந்தை பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற டிச.31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நகருக்குள் வரும் வாகனங்கள் செல்ல வேண்டிய பாதைகள் குறித்த வரைபடத்தை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றி நகருக்குள் வரும் வாகனங்கள் செல்ல காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதில் இலகுரக வாகனம், கனரக வாகனம், இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு வழி பாதை என தனித்தனியாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஷேர் செய்யவும்
திருவாரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம் மூலம் பெறப்பட்ட 20 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை ஆட்சியர் சாருஸ்ரீ இன்று வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் புவனா உடன் இருந்தார்.
நீடாமங்கலம் அருகே உள்ள விபி கட்டளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு நிதியினை ஒதுக்கி, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை, தமிழக தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள விபி கட்டளை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதற்கு நிதியினை ஒதுக்கி, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை, தமிழக தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.