India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோட்டூர் அருகே சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் வயலில் மாடு மேய்ச்சலுக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோட்டூர் இன்ஸ்பெக்டர் சிவகுமார், விக்கிரபாண்டியன் சப்.இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச் செல்வி, கல்விக்கரசன் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தி கமலேசை கைது செய்தனர்
திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நாளை (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை தினமாகும். இதனை மீறி மது விற்பனை நடப்பது தெரியவந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவர் தனது மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவ காப்பீட்டுத் தொகையை கோரியபோது, அதை தர மறுத்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது மன்னார்குடி நுகர்வோர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இதன் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.11.30 லட்சம் வழங்க திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் அஇஅதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் மா. சேகர், மாமனார் இரா.வேலு மறைவையொட்டி அவரின் திருஉருவ படத்தை திறந்து வைத்து தமிழ்நாடு அரசு முன்னாள் உணவு துறை அமைச்சருமான நன்னிலம் தொகுதி எம்எல்ஏவுமான இரா. காமராஜ், மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் போன்ற சமுதாய சார்ந்த அமைப்புகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இந்த சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆண்டு பொது குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீடாமங்கலம், ரிஷியூர், பெரம்பூர், காரிச்கான்குடி, கீழாளவந்தசேரி, தேவன்குடி மற்றும் ராஜப்பையன்சாவடி பகுதிகள் பயன்பெறும் வகையில் கோரையாற்றின் குறுக்கே, VP கட்டளை கிராமத்தில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB ராஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய இரண்டாவது தெப்பக்குளம் ஹரித்ராநதி எனப்படும் குளத்தில் தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முயற்சியால் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையின் மூலமாக படகு சவாரிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி அலுவலகங்களை நகரமன்ற தலைவர் சோழராஜன் இன்று ஆய்வு செய்தார்.
கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட 6 பள்ளிகளை சேர்ந்த 767 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார்
தஞ்சாவூர்-கோடியக்கரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் மன்னார்குடி அருகே அமைந்துள்ளது. சுமார் 112 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட வண்ண வண்ண உள்நாட்டு & புலம் பெயர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக செப்டம்பரில் அதிக பறவைகள் வருகின்றன. நீங்க இந்த சரணாலயத்தை விசிட் பண்ணிருக்கீங்களா?
நேற்று தேசிய யானைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி ராஜகோபால சாமி கோயில் யானை செங்கமலத்துடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டார். இதில், ‘அழகான செங்கமலம் யானை’ என்கிற கமெண்ட்ஸ் உடன் பதிவு செய்துள்ளார். இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.