Thiruvarur

News August 31, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி

image

கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருநெல்லிகாவல் ஊராட்சியில் நாகை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வை.செல்வராஜ் இன்று திருநெல்லிகாவல் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News August 31, 2024

வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் ரூ.21 லட்சம் காணிக்கை

image

வலங்கைமான் பேரூராட்சியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பாடைக் காவடி திருவிழாவுக்கு பிறகு அண்மையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.21.46 லட்சம் பணம் மற்றும் 303 கிராம் தங்க நகைகள் வசூலாகியிருந்தது. கோயிலில் உள்ள 6 உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி திருவாரூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராமு தலைமையில் நடைபெற்றது.

News August 31, 2024

கோட்டூர்: மகன் தாக்கியதில் தந்தை பலி

image

கோட்டூர் அருகே திருவண்டுதுறையை சேர்ந்தவர் மதியழகன் (57). இவருக்கு விஜயன், விஜயகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மதியழகனுக்கும், அவரது மகன் விஜயனுக்கும் சொத்து விவகாரம் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயன் கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்,

News August 30, 2024

திருவாரூரில் ட்ரோன் இயந்திரத்தின் செயல் விளக்கம்

image

வேளாண்மையில் ட்ரோன் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திர கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். மேலும் ட்ரோன் கருவியின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

News August 30, 2024

பிலிகுண்டு பகுதியை ஆய்வு செய்த எம்பி

image

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான பிலிகுண்டுக்கு வந்தடையும். இந்த பகுதியினை நாகை எம்பி வை.செல்வராஜ், விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தஞ்சை மாவட்ட செயலாளர்கள் வடக்கு மு.அ.பாரதி, தெற்கு முத்து உத்திராபதி இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, நெல்லை மாவட்ட செயலாளர் இசக்கிதுரை ஆகியோர் பார்வையிட்டனர்.

News August 30, 2024

திருவாரூரில் ட்ரோன் இயந்திரத்தின் செயல் விளக்கம்

image

வேளாண்மையில் ட்ரோன் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திர கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். மேலும் ட்ரோன் கருவியின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

News August 30, 2024

பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுவில் திருவாரூர் பிரமுகர்

image

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் கொண்ட குழு கட்சியை வழி நடத்துவார்கள் என மேலிடம் தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பொறுப்பிற்கு முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

News August 30, 2024

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

image

திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை (ஆக.30) இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 30, 2024

திருவாரூர்: சட்ட பணிகள் ஆணைக்குழுவில் காலி பணியிடங்கள்

image

திருவாரூர் சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். முதன்மை சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் 2, உதவி எதிர்வாத வழக்குரைஞர் 4, அலுவலக உதவியாளர் 3, பியூன் 2 ஆகியவற்றிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்.10-க்குள் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அனுப்ப வேண்டும்.

News August 30, 2024

திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய 50 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளோம். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 99658 60996, 82200 49077, 97917 31249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். SHARE NOW!

error: Content is protected !!