Thiruvarur

News August 28, 2024

பாதயாத்திரை செல்வோருக்கு ஸ்டிக்கர் ஒட்டிய எஸ்.பி

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று (ஆகஸ்ட் 27) கானூர் சோதனை சாவடி வழியாக வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் ஆடைகளில் இரவில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியும் தூக்கம் மற்றும் அதிக கலைப்புடன் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து ஓய்வு எடுத்து செல்லும்படி அறிவுரை கூறினார்.

News August 27, 2024

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆகஸ்ட் 27 இன்று முத்துப்பேட்டையில் நடைபெறும் விநாயகர் ஊர்வல சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 27, 2024

திருவாரூரில் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி

image

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஐந்து ஆம்புலன்ஸ் சேவைகளை தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த கால்நடை மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உடன் இருந்தார்.

News August 27, 2024

விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்ட அளவிலான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு கடைசி தேதி 2/9/2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கு http://sdat.in/cmtrophy/player-login/ எனும் முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

News August 27, 2024

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 01/01/2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக வரும் 31/01/2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 27, 2024

திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

வேளாங்கண்ணித் திருவிழாவை முன்னிட்டு நாளை 28-ஆம் தேதி விழாக்கால சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து 28ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இதே போல வேளாங்கண்ணியில் இருந்து வரும் 30-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும்.

News August 27, 2024

மன்னார்குடியில் லாட்டரி விற்பனை ஒருவர் கைது

image

மன்னார்குடி சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது மதுக்கூர் சாலையில் ஆன் லைன் லாட்டரி சீட் விற்பனை செய்த ஆண்ணாமலை நாதர் செட்டி தெருவை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் ஆன் லைன் லாட்டரி சீட் விற்பனை செய்ததால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

News August 27, 2024

முத்துப்பேட்டை ரவுடிக்கு காலில் மாவுக்கட்டு

image

முத்துப்பேட்டை தாலுக்கா களப்பால் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடந்த 9ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி மாதவன் என்பவரை இன்று போலீசார் ஆலங்காடு ரயில்வே மேம்பாலம் அருகே வைத்து பிடித்தபோது தப்பியோடினார். இதில் விழுந்ததில் கை கால் முறிந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து மாதவன் மன்னார்குடி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

News August 26, 2024

வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம்

image

கோட்டூர் அருகே ஓவர்ச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ராகவி. இவர், சிறுவயதில் இருந்தே பல்வேறு ஓவியங்கள் வரைவதில் தனித்திறமை பெற்றவர். இன்று நாடெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் நிலையில்,  தன் ஓவியத்திறமையை மிக பக்தியுடன் மங்கல பூஜை காரியங்களில் பயன்படுத்தும் வாழை இலையில் கிருஷ்ணர் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார். 

News August 26, 2024

ஸ்வீட் கடை உரிமையாளர் மகன் மரணம்

image

திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் மிகவும் பிரபலமான தீபம் சுவீட் உரிமையாளர் மோகன் மகன் அருள். நேற்று இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் அருள் என்பவர் படுகாயமடைந்தார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!