Thiruvarur

News August 29, 2024

மன்னார்குடியில் இன்று தொழில் கடன் வழங்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாபெரும் தொழில்கடன் வழங்கும் முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

திருச்சி கலைவாணர் அரங்கத்தில் வருகின்ற செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாற்று திறனாளிகள் ஆக.30ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயவிபரம் அடங்கிய குறிப்புகளை (Resume) 5-க்கு குறையாமல் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 29, 2024

மன்னார்குடியில் இன்று தொழில் கடன் வழங்கும் முகாம்

image

திருவாரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாபெரும் தொழில்கடன் வழங்கும் முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று நடத்தப்படும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். புகார்கள் தொடர்பாக 29 நபர்கள் மனுக்களை வழங்கினர். அவற்றை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க எஸ் பி உத்தரவிட்டார்.

News August 28, 2024

திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரின் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒசூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு வேலை வாய்ப்பு முகாம், வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1500 பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்ட 12ஆம் மற்றும் ஐடிஐ முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.

News August 28, 2024

முதலமைச்சரை அமெரிக்காவில் வரவேற்ற அமைச்சர்

image

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு முறை பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தமிழ்நாடு அரசு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சரும், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி ஆர் பி ராஜா அமெரிக்காவில் இன்று மலர்மாலை கொடுத்து வரவேற்றார்.

News August 28, 2024

திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய உள்ளோம். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 99658 60996, 82200 49077, 97917 31249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News August 28, 2024

முத்துப்பேட்டையில் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

image

நடமாடும் கால்நடை அவசர ஊர்தி வாகன சேவையை இன்று முத்துப்பேட்டை ஒன்றியம் ஓவரூர், வெள்ளாங்கால் பகுதியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து, விவசாய சங்க பொறுப்பாளர் கே. முருகையன், திருவாரூர் இணை இயக்குனர், மன்னார்குடி இணை இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News August 28, 2024

பேரளம் அருகே செல்போன் வாங்கி தராததால் சிறுவன் தற்கொலை

image

பேரளம் அருகே உள்ள திருமீயச்சூரை சேர்ந்தவர் ராதிகா. இவரது மகன் அய்யப்பன். இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அய்யப்பன் தனது தாயாரிடம் செல்போன் கேட்டுள்ளார். இதற்கு ராதிகா தன்னிடம் இப்போது பணம் இல்லை பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 28, 2024

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. வேளாண்மை சார்ந்த துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்க உள்ளனர். முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

error: Content is protected !!