India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வதேசம், ஒன்றியம் அல்லது ஒலிம்பிக் அளவில் விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். SHARE NOW!
திருவாரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு ரூ 6,000 ஓய்வூதியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. தகுதி சர்வதேச தேசிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிய அளவில் ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள், வயது 58 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி விழா மன்னார்குடி பகுதி கோவில்களில் வருகின்ற 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிலை பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் தங்கள் கோவிலின் விநாயகர் சிலைகளை நிர்வாகிகள் பெற்றுச் சென்றனர். ராஜகோபாலசாமி கோவில் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மும்மூர்த்தி விநாயகர் கோவில் உற்சவர் விநாயகரை நிர்வாகி பெற்று செல்வதை படத்தில் காணலாம்.
முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஜியா உல் ஹக், இன்று விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த திட்டத்தை பார்வையிட்டார்கள். உடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் வகையில், முத்துப்பேட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.
மன்னார்குடி நகரின் பல்வேறு இடங்களில், விநாயகர் சதுர்த்தியை ஓட்டி விநாயகர் சிலைகளை வைப்பதற்கு பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பழைய தஞ்சை சாலை பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த விநாயகர் சிலையின் கண்கள் திறக்கும் நிகழ்ச்சி நடத்தி அதன் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் வேலூர் ஊராட்சி நியாய விலை கடையினை செப்டம்பர் 5 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் நேரில் சென்று நியாய விலை கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை இருப்பு உள்ளதா, அளவு சரியாக உள்ளதா என சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார். அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவத்திற்குப் 9184 மெ.டன் யூரியாவும், 2067 மெ.டன் டி.ஏ.பியும், 1024 மெ.டன் பொட்டாஷ், 1758 மெ.டன் காம்ப்ளக்ஸ், 354 மெ.டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகவலை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமங்கலம் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மேலபுள்ளான் விடுதியை சேர்ந்த கணேசன் என்றும், காதலிக்கு வேறொருடன் திருமண நடக்க இருந்ததால், ‘நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று வீடியோ வெளியிட்டு உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு திருவாரூர் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று 5/9/24 காலை 11 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் (ஆர் டி ஒ) அலுவலகத்தில் நடைபெறும். மாற்று திறனாளிகள் தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.