India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண்மையில் ட்ரோன் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திர கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். மேலும் ட்ரோன் கருவியின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் கொண்ட குழு கட்சியை வழி நடத்துவார்கள் என மேலிடம் தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பொறுப்பிற்கு முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் மாநில ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை (ஆக.30) இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவாரூர் சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். முதன்மை சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் 2, உதவி எதிர்வாத வழக்குரைஞர் 4, அலுவலக உதவியாளர் 3, பியூன் 2 ஆகியவற்றிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்.10-க்குள் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அனுப்ப வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய 50 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளோம். 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 99658 60996, 82200 49077, 97917 31249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு அளவானது (மிமீ) ஆக.29 காலை 6.00 முதல் ஆக.30 காலை 6.00 மணி வரை நிலவரப்படி: திருவாரூர் – 0.0, நன்னிலம் – 47.8, குடவாசல் – 0.0, வலங்கைமான் -3.0, மன்னார்குடி – 0.0, நீடாமங்கலம்- 0.0, பாண்டவையாறு – 0.0, திருத்துறைப்பூண்டி-56.2, முத்துப்பேட்டை – 8.6 என மொத்தம்-115.6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 56.2 மி.மீ பதிவாகியுள்ளது.
திருவாரூரை சேர்ந்த இறந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் உடல், தவறுதலாக சேலத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், ஒரு மாதத்திற்கு முன்பு தவறுதலாக ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட ராஜேந்திரன் உடலை தோண்டி எடுத்து மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க, சிறப்பு தத்துவ வள மையம் துவங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருவாரூர் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க, சிறப்பு தத்துவ வள மையம் துவங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருவாரூர் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மாணிக்க வாசகர் பெருமான் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் நேற்று இரவு வேளுக்குடி கிராமத்திற்கு வருகை புரிந்தார். கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவரிடம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆசி பெற்றுச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.