Thiruvarur

News September 1, 2024

திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு அளவானது (மில்லிமீட்டரில்) நேற்று (ஆக.31) காலை 6 மணி முதல் (செப்.1) காலை 6.00 மணி வரையிலான நிலவரப்படி, திருவாரூர் – 0.0, நன்னிலம் – 0.0, வலங்கைமான்-6.2, மன்னார்குடி- 27. நீடாமங்கலம்- 22.6, பாண்டவையாறு-2.6 என மொத்தம் -77.4 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 27 ம.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

News September 1, 2024

மன்னார்குடி அருகே பெண் மரணம்

image

மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36). இவருக்கும், தஞ்சை பகுதியை சேர்ந்த பவானி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் பவானி தனது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் பவானியின் தாயார் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவாக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

News September 1, 2024

திருத்துறைப்பூண்டியில் இலவச காப்பீடு அட்டை முகாம்

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை இலவச காப்பீடு அட்டைப் பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் (செப்.01) இன்று திருத்துறைப்பூண்டி புனித தெரசா தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பதிவுசெய்ய ஸ்மார்ட் கார்டு (ரேஷன் கார்டு) மற்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். பதிவு எண் உடனே தரப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

நன்னிலம் திமுக உறுப்பினர் கூட்டத்தில் MLA

image

பூந்தோட்டம் M.K மஹாலில் இன்று (31.08.2024) மதியம் 11.00 மணியளவில் நன்னிலம் தெற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திருவாரூர் MLA பூண்டி. கே. கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வே.மனோகரன் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் செல்வராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 31, 2024

வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ரத்து

image

சென்னை-வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நாளை (செப்.1) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.1) இரவு 11.50-க்கு புறப்பட வேண்டிய ரயிலும், மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து திங்கட்கிழமை (செப்.2) இரவு 7.10 மணிக்கு இயக்கபட இருந்த ரயிலும் ரத்து செய்ய படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

News August 31, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி

image

கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருநெல்லிகாவல் ஊராட்சியில் நாகை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வை.செல்வராஜ் இன்று திருநெல்லிகாவல் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News August 31, 2024

வலங்கைமான் மாரியம்மன் கோவிலில் ரூ.21 லட்சம் காணிக்கை

image

வலங்கைமான் பேரூராட்சியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பாடைக் காவடி திருவிழாவுக்கு பிறகு அண்மையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ.21.46 லட்சம் பணம் மற்றும் 303 கிராம் தங்க நகைகள் வசூலாகியிருந்தது. கோயிலில் உள்ள 6 உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி திருவாரூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராமு தலைமையில் நடைபெற்றது.

News August 31, 2024

கோட்டூர்: மகன் தாக்கியதில் தந்தை பலி

image

கோட்டூர் அருகே திருவண்டுதுறையை சேர்ந்தவர் மதியழகன் (57). இவருக்கு விஜயன், விஜயகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மதியழகனுக்கும், அவரது மகன் விஜயனுக்கும் சொத்து விவகாரம் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயன் கட்டையால் தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மதியழகன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்,

News August 30, 2024

திருவாரூரில் ட்ரோன் இயந்திரத்தின் செயல் விளக்கம்

image

வேளாண்மையில் ட்ரோன் இயந்திரத்தின் பயன்பாடு குறித்து செயல் விளக்கம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திர கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். மேலும் ட்ரோன் கருவியின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

News August 30, 2024

பிலிகுண்டு பகுதியை ஆய்வு செய்த எம்பி

image

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான பிலிகுண்டுக்கு வந்தடையும். இந்த பகுதியினை நாகை எம்பி வை.செல்வராஜ், விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தஞ்சை மாவட்ட செயலாளர்கள் வடக்கு மு.அ.பாரதி, தெற்கு முத்து உத்திராபதி இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி, நெல்லை மாவட்ட செயலாளர் இசக்கிதுரை ஆகியோர் பார்வையிட்டனர்.

error: Content is protected !!