India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூரில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 418 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும் பின்னர் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கவும் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலத்தை முடிக்குமாறும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன் என்று எஸ்பி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை செப்டம்பர் 3 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் நகராட்சி பொறியாளர் மற்றும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்தும் 8-ஆவது சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை திருவாரூர் தைலம்மை திரையரங்கில் நடைபெற உள்ளது. இதில் 11 நாடுகளை சேர்ந்த 22 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 5 நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவின் டிக்கெட் ஒன்றின் விலை ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் கே.எஸ்.சிவவடிவேல் 46-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவாரூர், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இலவச இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை முகாம் நாளை (செப்.4) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாரூர் வேலுடையார் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் இன்று (செப்.3) நிலவரப்படி: மட்டன் கிலோ ரூ.750 முதல் ரூ.900 வரையிலும், எழும்பு கறி ரூ.500 முதல் 700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முத்துப்பேட்டையில் மட்டன் கறி ரூ.800 முதல் 1000 வரை விற்கப்படுகிறது. எறும்பு கறி ரூ.500 முதல் 700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருவாரூர் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து 14 மற்றும் 17 வயதிற்குப்பட்டோர் பிரிவில் வாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் கலைவாணனையும் தலைமை ஆசிரியர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செப்டம்பர் 2 இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிழற்குடை அமைத்து காய்கறி சாகுபடி செய்திடவும், உணவுக் காளான் உற்பத்தி குடில் அமைத்திடவும் மானியம் பெறும் விவசாயிகளுக்கு பணிக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசு உதவிகளை மனுக்களாக எழுதி ஆட்சியர் சாரூஸ்ரீ அவர்களிடம் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் 02.09.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 448 மனுக்கள் பெறப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலகு சார்பில் ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கியது. இந்த பேரணியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.