Thiruvarur

News November 13, 2024

14 தனியார் உரக் கடைகளுக்கு சீல்

image

திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் மற்றும் இணை பொருட்கள் வாங்கினால் தான் உரம் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து 14 தனியார் உர கடைகளுக்கு தற்காலிகமாக உர விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார். குடவாசல் மன்னார்குடி உள்ளிட்ட 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

News November 13, 2024

திருவாரூரில் ரேஷன் கடைகள் இயங்காது

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் நவ.16 ஆம் தேதி இயங்காது என அறிவித்திருந்தனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் 27.10.2024 அன்று செயல்பட்டதற்கு பதிலாக நவம்பர் 16 சனியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 13, 2024

திருவாரூர் :நாளை சட்ட பேரவை மதிப்பீட்டுக்குழு வருகை

image

நாளை காலை 9.30 மணி முதல் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மதிப்பீடுகள் தொடர்பாக நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடக்கிறது. இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

 அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2025 தேர்தல் ஆணையர் அறிவுரைகள் தொடர்பாகவும், இந்த மாதத்தில் நடைபெற இருக்கிற வாக்காளர் சேர்க்கை முகாம் தொடர்பாகவும் ஆயவுக் கூட்டம் நவ.15ஆம் தேதி  மாலை 4 மணியளவில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி சார்ந்த ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

News November 13, 2024

திருவாரூரில் 18 மி மீட்டர் மழை

image

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது . அதன் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 18மி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 13, 2024

விபத்தில் ரவுடிகளுக்கு கால் முறிவு

image

கொரடாச்சேரி மேலபருத்தியூர் விக்னேஷ்வரன்(35) மற்றும் பெருமாளகரம் விஜய்(40) ஆகிய இருவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்று போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று குளிக்கரை அருகே இருவரும் பைக்கில் போகும் போது நாய் குறுக்கே வந்து விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 12, 2024

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் கோட்டத்தில் மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் எதிர்வரும் 21.11.2024 மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் சௌமியா தெரிவித்துள்ளார். 

News November 12, 2024

திருவாரூர் கலெக்டரின் குழந்தைகள் தின வாழ்த்து

image

நாளை (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இரண்டு பக்க வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் குழந்தைகள் தின வாழ்த்துக்களோடு, பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவு இருந்தால் உடனே நெருங்கியவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், போதை பழக்கம், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 12, 2024

திருவாரூரில் நவ.14 சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு 

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வரும் வியாழக்கிழமை காலை 9:30 மணி முதல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின்னர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மாலை 3 மணி அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. 

News November 12, 2024

திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு, கடலோர தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.12) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. SHARE NOW!

error: Content is protected !!