India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6.07 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் 263.14 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மதிப்பீடு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தைச் சார்ந்தவர் ஜெகன் (19). கல்லூரி மாணவர். நேற்று நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது அங்கு சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.அவருடைய பெற்றோர், பொன்னேரி காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அவரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் 4 மணி நேரத்திற்கு அவரை சடலமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் இருந்து, திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, நேற்று, திருத்தணி போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக கோயம்பேடு செல்லும் அரசு பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது மோகன்ராஜ் என்ற பயணியிடம், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் மோகன்ராஜ்யை கைது செய்தனர்.
பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கு மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையில் பொன்னேரி ரயில் நிலையத்தில்ஆய்வு செய்தபோது ரேஷன் அரிசி 50 கிலோ எடைகொண்ட 36 கோணி பையில் 1790கிலோ எடைகொண்ட ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, பொன்னேரி அடுத்த பஞ்செட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 30மி.மீ, கும்மிடிப்பூண்டி 24 மி.மீ, சோழவரத்தில் 10மி.மீ, செங்குன்றத்தில் 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திருமழிசை,காக்களூர் திருத்தணி, பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, திருமழிசை, வெள்ளவேடு, குத்தம்பாக்கம், காக்களூர் தொழில்பேட்டை, பூண்டி, திருத்தணி நகரம் அகூர் ,பொன்பாடி, மத்தூர், தச்சூர் கூட்டுச்சாலை பெரவள்ளூர்,அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பூண்டி மேற்கு ஒன்றியம் புதூர் கிராமத்தில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பதூர் பள்ளி மாணவ, மாணவியர்க்கு நேற்று நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் சட்டமன்றத் உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் வழங்கினர். உடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.