Thiruvallur

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.<> ஷேர் பண்ணுங்க<<>>

News March 5, 2025

ஒரு நாள் சம்பளம் பிடித்தம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது.இதன் மூலம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார மக்களும் பயன் அடைகிறார்கள்.இந்நிலையில் இக்கல்லூரியில் ஒப்பந்த பணியாளர்களாக பலர் பணியமர்த்தப்பட்டன ஆனால் அவர்களில் 35 பேர் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாததால் அவர்களுக்கு ஒருநாள் ஊதிய பிடித்தம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 5, 2025

மாமாவை கொன்ற வழக்கு 34 ஆண்டுக்கு பின் மச்சான் கைது

image

ஆவடி சேர்ந்தவர் ரஞ்சித் சிங் ராணா இவரது மனைவி மதுமதி, ரஞ்சித் சிங் ராணா, அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து, மனைவியை அடிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மதுமதியின் தம்பி பாலாஜி, கடந்த 1991ல் ராணாவை கொலை செய்துள்ளார்.இவ்வழக்கு தொடர்பாக, போலீசார் விசாரனையில் மதுமதி கைது செய்யப்பட்ட நிலையில், பாலாஜியை தீவிர தேடுதலுக்கு பின் 34 ஆண்டுகளுக்கு பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 4, 2025

பல் மருத்துவத்தில் வேலை; கைநிறைய சம்பளம்

image

சென்னையில் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.17. இதற்கு BDS முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்க <>கிளிக்<<>> பண்ணுங்க. மறக்காம SHARE பண்ணுங்க.

News March 4, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 4, 2025

திருமண தடையை நீக்கும் ஆகாஸ பைரவர்

image

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆகாஸ பைரவர் ஆலையம் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பே அஷ்ட பைரவர்கள் எட்டு பைரவர்கள் உள்ளனர். ஒரே இடத்தில் இந்த 8 பைரவர்களை தரிசனம் செய்யும் அற்புத தலமாக உள்ளது. மேலும், தொலைந்த பொருளை மீட்க, செல்வம் பெருக இங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 4, 2025

விவசாயிகளுக்கு அடையாள எண் பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், இ-சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிக்கலாம். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகளை சேகரித்து 33,710 விவசாயிகளுக்கு இதுவரை அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்டா, ஆதார் எண்ணுடன் இ-சேவை மையங்களில் பதிவு செய்து எண் பெறலாம். இவற்றை பெறாத விவசாயிகளுக்கே நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

News March 4, 2025

தொழில்நுட்ப கோளாறால் டாஸ்மாக் விற்பனை பாதிப்பு

image

மது பாட்டில்களை தினமும் ஸ்கேன் செய்து விற்பனை செய்ய கையடக்க வடிவில், ‘பார்கோடு ரீடர்’ கருவிகளும், பிரின்டர் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. கருவியில் மதுபாட்டில் மேல் உள்ள க்யூ.ஆர். குறியீடை ‘ஸ்கேன்’ செய்யும்போது, சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறால் ஸ்கேன் ஆவதில்லை. இதனால் விற்பனை தாமதப்படுகிறது. எனவே, கணினி மையத்தை தரம் உயர்த்த வேண்டும் என திருவள்ளூர் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <>ஆன்லைன் <<>>வழியாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

345 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதவில்லை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 109 மையங்களில், நேற்று (மார்.3 பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 27,836 பேரில், 27,554 பேர் தேர்வு எழுதினர். 282 மாணவர்கள் தேர்வில் பங்கு பெறவில்லை. அதேப்போல, 600 தனித்தேர்வர்களில் 537 பேர் பங்கேற்றனர். அவர்களில் 63 பேர் தேர்வில் பங்குபெறவில்லை. ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் 345 பேர் தேர்வு எழுதவில்லை என கலெக்டர் பிரதாப் கூறினார்.

error: Content is protected !!